Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Friday, June 30, 2006

Welcome Swati Kanitkar / Kaushidhwani to Audio-Blogging world

It is not only a pleasure but an honor to introduce Swati Kanitkar - my singer friend par excellence - to the audio blog world. I met Swati, also known as Kaushidhwani in yahoo music room long back.


http://swatimusic.blogspot.com

And a sample of her musical prowess from her expanding musical repertoire - Dayaghana is -presented here.

dayaghana -broadband



dayaghana -dialup



This is what I wrote about Swati on Orkut for her testimonial:

A voice that made me a composer way back in 2002. A singer par excellence. The sheer beauty of her mesmerizing delivery can render the listener spell-bound. Swati is one of those artists who one cannot come across everyday in life. Her command on akaar aalaap is so high that, it sometimes makes me hold my hands in a 'namaste' position in awe ! An artist who is always willing to work with new ideas. For all and sundry she is Swati. For me, she will always be Kaushiji.

Listening to Kaushiji in devotionals is a sublime experience akin to experiencing a divine interception in life. I can unabashedly say that I am a total pujari of her voice and that she is one of my two singing goddesses. (The other one is Deepa Sethuraman about whom I may write a blog in the future). I have also been fortunate to have her sing a composition of mine which I plan to release with complete orchestration. I think having Swati in our midst is a blessing. Had she not chosen to live in USA, I am sure she would have been picked by the best of music directors in Bombay and been catapulted to fame. Well, at least for once music directors were not lucky and we, the audiobloggers, are.

Please welcome Swati to our ever-expanding audio blog world. Kaushiji - I believe you can infuse some fresh spirit in our already bubbly audioblogging world. It is a privilege to have you among us.

Thursday, June 29, 2006

Passed my PhD defense

My patient vigil seems to have finally paid off. My committee has passed me in the defense or unofficially I am Dr. Venkatraman :-). I am still required to get the thesis cleaned up and submit the already written papers to the journals which may take almost a month. I am hoping I can do it.


Tuesday, June 20, 2006

Reckless ramblings 4 -a poem war with my friends-கவிதைப் போர்

Dhool.com இல் எங்கள் குழுவிற்கு என்று ஒரு தனிப்பக்கம் இருக்கிறது. அங்கே அரட்டை அடிப்பது தான் வாடிக்கை. நண்பன் அருண் எழுதிய ஒரு கவிதையை பார்த்து விட்டு பாலாஜி (bb) கிண்டல் அடிக்க அருண் சார்பாக நான்(MS) பேச என்று ஒரு முறை கவிதைப் போர் நடந்தது. அருண் நெத்தியடி, நச் பூமராங் மாதிரி நையாண்டி சமாச்சாரங்களும், அரசியல் பத்தியும் எழுதுவான். அது பாலாஜிக்குப் பிடிக்கும். ஆனா அவன் எழுதற கவிதை.... இதிலே நடுவே மற்றவரும் இடைச்செருகல்கள் செய்தனர். பங்கு கொண்ட எல்லாரும் நணபர்கள். - அருணா பாலாஜியின் மனைவி. இதனை ஒரு நண்பர் குழாமில் நடந்த வாக்குவாதமாகக் கருதுங்கள்.

==============================================

bb:
நெத்தியடி இட்டுவிடு எத்தனை முறையேனும்
சுத்தியடிக் கும்நச்பூ மராங்குகளும் போட்டுவிடு
பக்தியடிக் கும்நல் சபரிகதையும் சரிதான்
கத்திஎடுப் பேன்உன் கவிதைப் பார்த்து.


MS:
கத்தி எடுத்தாலும் லத்தி எடுத்தாலும்
கத்தித் தடுத்தாலும் கவிதை - பத்தி
புரிந்து பதிவும் செய்துந்தன் சங்கை
அரிந்து நிற்பேன் நான்


bb:
கையை யுடைப்பேன் கவிதை யெழுதினால்
நைய புடைப்பேன் நெஞ்சு நனைந்தால்
தைய லிடுவேன் உதட்டை இறுக்கி
வையத்தி லினிசாகும் கவி.

MS:
நெஞ்சு நனைதற்கு உன்பிள்ளை காரணமே
நஞ்சு உமிழாதே நண்ப(¡) - கெஞ்சு
கொஞ்சு இறைஞ்சு இடித்தென்னை இழிந்திடுக
அஞ்சு தலைஅறியேன் நான்.


bb:
அருணாச் சலனே (அருண்)
கருணைக் கொள்ளு
கட்டுரை போதும்
கட்டளை இதுவே
இட்டது போதும்
சட்டென நிறுத்து
வேண்டாம் கவிதை
கூண்டோ டெரி.

MS:
அருணா மனையோனே
அரிவாள் முனையோனே
கருநா கொண்டோனே
கவியின் கூற்றோனே
கட்டும் உரைமேலே
கனன்று உமிழ்வோனே
சுட்டும் விதையாகி
செடியாய் விளைவேனே

bb:
அஞ்சு தலையறியா ஒற்றைத் தலையனே
கஞ்சி கிடைக்காது நீகவிதைப் பாடினால்
கெஞ்சினால் மிஞ்சாதே நிறுத்து இனியேனும்
பஞ்சுமிட் டாய்தருவே னுனக்கு.

MS:
பஞ்சுமிட் டாய்வாங்கிப் பகிர்ந்துண்டு வாழுமொரு
பஞ்சநிலை அவலமது எனக்கில்லை பாலாஜி
இஞ்சியினை தின்றவொரு மந்தியினைப் போல்வதனம்
கொஞ்சமெனும் காட்டாது குந்துவாய் ஓரமாய்.

bb:
எச்சில் முழுங்கும் கவிதை வேண்டாம்
நச்சென அடிக்கும் நெத்தியடி போதும்
சத்துணவு வேண்டாத பத்துவரி வேண்டாம்
சட்டென சினிமா கிரிக்கெட் போதும்
பூணூல் அறுக்கும் அறுவை வேண்டாம்
பூடக அரசியல் இழுவை போதும்.

MS:
எச்சில் கவிதை எழுதல் நன்றே
அச்சில் அதனை ஏற்றல் நன்றே
கொச்சை மன்னர் காய்கறி போலே (balaji had a blog titled of cabbages and kings)
எச்சில் பிறரின் அன்றே எந்தன்
நச்சில் ஊறிய நாவின் ஒன்றே.

Arun:
அய்யகோ...போதும் போதும்!
பிபிக்குப் பிடித்ததென்று
கட்டுரை எழுதுவேன்!
உதயாவுக்குப் பிடித்ததென்று
கவிதை எழுதுவேன்!
எழுத்து எனக்குப் பிடிக்குமென்பதால்
ஏதாவது எழுதுவேன்.
பிடித்தால் படி.
பிடிக்கவில்லையென்றால்
படித்துவிட்டு இடி.
மொத்தத்தில், இந்த விவாதத்தை முடி!
முரளிக்குப் பிடிக்குமென்பதால்
மூன்றாம் வாய்ப்பாடு கூட எழுதுவேன்

bb:
பிடிக்கும் எனக்கு சரோஜாதேவி
பிடிக்கும் ரங்காக்கு மல்கோவாமாமி
பிடிக்கும் முரளிக்கு காமலோககாமி
எழுதிடு இதையெல்லாம் முதலில்.

Sri:
எனக்கு பிடிக்கும் சரோஜாதேவி
எனக்கு பிடிக்கும் சரோஜாதேவி

எனக்கு பிடிக்கும் சரோஜாதேவி [pause]
எனக்கு பிடிக்கும் சரோஜாதேவி

bb:
உதயா கெடக்கான்
கதையாய் விடுவான்
நம்பாத சரக்கை
வம்பாகப் புகழ்வான்
வேலியின் ஓணானை
வேட்டியில் விட்டிடுவான்
சந்தடியில் கேட்டுத்தான்
சந்தையில் வாங்குவான்
கால்கிலோ கவிதை
நாலரை ரூபாயென.

உதயா புகழ நீயும் எழுத
கதையா ஆகும் ஸ்ரீகாந்த் போல
அவனும் மயங்கிப் போனான் இப்படி
அதனால் வந்தது நந்தவன போண்டி.

Ranga:
ஒரு கானாவும் இருந்துட்டு போகட்டுமே...

அருணு போட்ட நெத்தியடி டாப்பூ
அவரோட கவிதைக்கு தான் ஆப்பூ
நா ஒரு பல்லு போன சீப்பு- பகிள்ள
உட்டேன்னா போட்டுக்குவே காப்பு

வெளியே சேறு
வீசினால்
உள்ளம்
தூய்மையாகிறது.
தூர்வாரி.....தூர்வாரி...

MS (குணா style):
ரங்கா, கூடவே சோமாறி, கேப்மாறி எல்லாம் போட்டுக்கணும்.

Sri:
பூணூல்
rendu natkaLil unaku
renewal.

vetinalum valar ven.
mazithalum valarven
na periya m'ir...

AruNa:

எழுதுவதெல்லாம் கவியல்ல
எதுகை மோனை இருந்துவிட்டால்-மட்டும்
பத்து வரி தமிழ்ச்சொல் கொண்டால்-மட்டும்
கர்த்தனை காணாமல் -மட்டும்
போடும் பத்துவரி எழுதுவதெல்லாம் கவியல்ல.

MS:
கர்த்தனைக் காணமலா ?என்ன திடீர்னு யேசு க்ரிஸ்து மீது எல்லாம் கவிதை ?

AruNa:
கர்த்தனை = கருத்தினை

bb:
அழியா அன்புடன்
பழியாய் கிடந்து
கழியா மலம்போல்
வழியை அடைத்து
நுழையா வாயிலை
ஒழியா துதிறந்து
கழுவா முகத்தோனே
எழுதா தேஇனி;

Ranga:
கவிதை நாறுது

MS:
உதயா மிடுக்கான்
உதையாய் தருவான்
கதையோ விடுவாய் ?
காதை பிடிப்பான்.
மொந்தையில் கள்ளும்
முற்றிய சுருட்டும்
சந்தையில் வாங்கி
சடுதியில் தீர்ப்பான்
சந்தமும் தருவான்
சந்தடி சாக்கில்
நிந்தனை செய்தால்
உந்தனை தீர்ப்பான்.

bb:
சரிதான் போ நீ எழுதிக்கோ
கரிதான் முகத்தில பூசிக்கோ
நகல்எடு இங்கே போட்டுடு
அவல்தான் எங்க வாய்க்கு.

MS:
எழுதாதே என்றிட பேனாவோ உனதன்று
கழுவாதே என்றிட கழிவாயில் உனதன்று
கழியாதே வீணாக பயனுன்னால் ஏதுமிலை
பழியாதே வந்தென் பிட்டத்தில் முத்தமிடு

--------------------------------------------------------------------------------

Late Responses:

Udhaya:
தனக்கெட்டிய எதிலும்
திறமையில்லை என்பார் இவர்
தினசரி தென்படுவதால்
சூரியனும் சராசரி
இவர்களுக்கு

என்றோ ஒருவன் அலங்கரித்துவிட்டுப்
போன அடுக்குமொழிதான்
இவரின் அளவுகோல்

இவர்வழிப்படி இன்றும்
செக்குமாடுதான் ஏருக்கு
பாய்மரம்தான் விரிந்த கடலுக்கு
உடன்கட்டைதான் இழந்த உறவுக்கு

பழமையின் களஞ்சியத்தில்
புலமை முக்கியமே தவிர
நிகழ்ந்த காலத்தின்
கோட்பாடுகள் அல்ல

அன்று மண்டை வெல்லம்
இன்று தொழிற்சாலை தைக்கும்
சிறு காகிதப் பை
இரண்டும் இனிப்பை ஏந்திவரும்
சுவைக்கத் தெரிந்தால்

சர்க்கரையை உருட்டி
மண்டை வெல்லம் தேடும் மனிதர்கள்
இருந்துவிட்டுப் போகட்டும்
என் உலகில் உண்டு
எல்லோருக்கும் அனுமதி

bb:
dhOdaa, vandhuttaaru serious kavignaru. yov U, innikku jolly kavidhai day. padikkaliyaa?

மண்டை வெல்லம் கொண்டை ஊசி
கெண்டைக் காலு சண்டைக் கோழின்னு
கண்டபடி எழுதவந்த குண்டுபுஸ்கு உதயா
மண்டை காய வைக்குதுங்க பாட்டு :))

Monday, June 19, 2006

திரு SPB க்கு ஒரு கடிதம் - A letter to SPB on his 60th birthday !

Dhool celebrates SPB's 60th year on June 4th !!!!!!

As a humble tribute to this melody giant who has bewitched us with his music and personality, dhool celebrates SPB's 60th Bday. We had a conversation with SPB on this occassion, the mp3 of which is also avialable !!!

Visit Here ! http://dhool.com/spb60/

Request ! Please make a post in your blog about this and spread the word !!!

We urge all to write about SPB or any nice encounters / experiences with him and send it to us ! We plan to collect it all and host it in dhool with appropriate credits !!!!

I have written an article in a 'Letter to SPB' format. You can listen to it in my voice:




The PDF version of the letter available
here :














மதிப்பிற்குரிய பாடும் நிலா பாலு அவர்களுக்கு,
ஒரு பாமரனின் புலம்பல் கடிதம் இது. பல்லாண்டு காலமாக நீங்கள் என் வாழ்க்கையில் செய்து வரும் அக்கிரமங்களை வரிசைப்படுத்தி கேள்வி கேட்கப் போகிறேன்.
கேள்வி 1: ஏனய்யா என் வாழ்க்கையில் இப்படி ஒரு பெரும் அங்கமாக ஆகிப் போனீர்கள் ?
எந்த நேரமும் உங்கள் பாடல்களை கேட்கும்படியாக என்னை ஏன் பித்துப் பிடித்து அலையச் செய்கிறீர்கள் ?நான் கருவிலே இருந்து காதுகள் முளைத்தபோது கேட்ட முதல் இசைக் குரல்கள் உங்கள் குரலும் திரு யேசுதாஸ் அவர்களது குரலும் ஆகும். அதாவது உலகில் பிறந்து தாய் தந்தையரின் தாலாட்டு கேட்கும் முன்னரே உங்கள் தாலாட்டையும் மற்ற எல்லா உணர்சிகளும் உள்ள பாடல்களையும் கேட்டு முடித்து விட்டு இருந்தேன்..
கேள்வி 2 : ஒரு தாய் தானே தன் குழந்தைக்கு முதல் பாட்டை பாடவேணுடும் ? அவள் குரல் தானே அந்தக் குழந்தையை மகிழ்விக்க வேண்டும் ? நீங்கள் ஒரு தாயின் உரிமையை பறித்தது சரியா ?
என்ன..உலகில் வந்த உடன் "அம்மா..நான் உள்ள இருக்கும்போது SPB , ஜானகின்னு 2 பேர் பாடிக்கிட்டு இருந்தாங்களே, அவங்க எங்கம்மா ?" என்று கேட்க பேச்சு வரவில்லை. அந்த தளிர் வயதிலும் சிந்தனை மட்டும் இருந்தது.

மாலை நேரம். நெல்லைச் சீமையில் தக தக என் தங்க சூரியன் எரிந்து எல்லாரையும் இன்னும் காயப் படுத்திக் கொண்டு இருக்கிறான். வீட்டில் எல்லாரும் சிவனே என்று காப்பி குடித்துக்கொண்டு வெய்யிலின் உக்கிரத்தால் மந்தமாகி உள்ளனர். "இலங்கை ஒலி பரப்புக் கோட்டுத் தாபனம். தமிழ்ச் சேவை இரண்டு..இது ஒரு பொன் மாலை பொழுது..பாடலை பாட வருகிறார் S.P. பாலசுப்ரமணியம்". வயது நான்கு. வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டு இருக்கிறேன் ஒரு குழந்தை மட்டுமே அமரக்கூடிய குட்டி நாற்காலியில். பாடல் வருகிறது. சிந்தனை மாறுகிறது. வீட்டுப்பாடத்தில் கவனம் இல்லை.
"அம்மா..பொன்மாலை பொழுதுன்னா என்னம்மா ?"
"..தங்கம் மாதிரி ஜொலிக்கிற சாயங்கால வேளைடா ராஜா"..
எனக்கு புரியவீல்லை. இதென்ன ? அநியாயத்திற்கு சுடுகிறது..இந்த SPB மாமா சந்தோஷமா பாடறார் ?" வெளியில் சென்று பார்க்கிறேன். தன் தங்கக் கரங்களைக் கொண்டு சூரியன் மஞ்சள் வண்ணம் பூசிய அந்த வானமும், மேகங்கள் இடையே சில சமயம் ஊடுருவிப் பாயும் ஒளி இளஞ்சிவப்பு வண்ணத்தில் அழகை வாரித்தெளித்து விட்டு இருப்பதைம் உணர்கிறேன். அப்போது தான் சாயங்கால வேளை என்பதற்கு சூரியன் சாயம் பூசும் வேளை என உணர்ந்து கொண்டேன். அம்மா சொன்னது புரிந்தது. வானம் எனக்கு ஒரு போதி மரம். நீங்கள் எனக்கு புத்தர் ஆகிப் போனீர்கள். "அட..SPB மாமா பாடின மாதிரி அழகாத்தானே இருக்கு ?" என்று வாசலில் கால் வைத்தேன். விழுந்தது பிரம்பால் ஒரு அடி. "டேய்..படிக்காம எங்கேடா போறே ?"
கேள்வி 3: இப்படி ஒரு சிறுவனை அவன் அறியாமல் உங்கள் குரலால் வசப்படுத்தி, அடி வாங்க வைத்தது சரியா ?
சிறுவனாக இருந்த போது உங்கள் பாடல்களை உங்கள் பாடல்கள் என்று அறியாமல், ரஜினி அவர்களின் பாடல்கள் என்று நினைத்து இருக்கிறென். திரு ரஜினிகாந்த் அவர்களின் வசீகரத்தால் ஈர்க்கப்பட்ட நான் "ஆ. ஓஹோ ம்ம் ஹ்ம்ம்..காதலின் தீபம் ஒன்று என்ற பாடலை ரஜினிகாந்த் எவ்வளவு அழகாகப் பாடுகிறார்..அதோடு எவ்வளவு சூப்பராக சண்டையும் போடுகிறார்" என்று வியந்து முடியைப் பின்புறம் தள்ளிவிட்டு அவரது ரசிகன் ஆனேன். சகலகலாவல்லவன் படத்தில் "தக தக தக ததந்தா..இளமை இதோ இதோ..ஆஹா கமல் சூப்பரா பாடி ஆடுறார்" என்று நினைத்து அவருடைய ரசிகனும் ஆனேன்.
அம்மா அப்பாவிடம் "ரஜினி மாதிரி சூப்பரா பாடமுடியாது" என்று அழுத்திச் சொல்ல.."டேய் அதை பாடுறது SPB " என்று சொல்ல..ஒரே வாக்குவாதம். நான் நம்பவே இல்லை. ரஜினி தலையை ஆட்டி ஆட்டிப் பாடும்போதெல்லாம் அதெப்படி இவ்வளவு அழகாக வேறொருவர் பாட முடியும் ? முடியாது என்று அழுத்தந்திருத்தமாக நம்பினேன். "டேய் பாடத்தை படிடா..ரஜினி, பாட்டு பாடறாராம்..துரை கேட்குறாராம்" என்று வசவுச் சொல் வாங்கினேன்.
கேள்வி 4 : இப்படி அத்தனை கதாநாயகர்கள், குறிப்பாக திரு ரஜினி அவர்களுக்கு பொருந்தும் படியாகப் பாடி என்னைப் போன்ற சிறுவர்களை மயக்கிய தவறுக்கு என்ன பதில் கூறப்போகிறீர்கள் ?
மீசையும் ஆசையும் அரும்பிய வயதில் "கேளடி என் பாவையே..ஆடவன் உன் தேவையே" என்று என்னை ரோமியோவாக நினத்து என் கூடப் படிக்கும் பெண்ணிடம் பாடி, அவள் அழுது, என் வாத்தியார் வந்து என் காதை திருகியது ஞாபகம் வருகிறது. கண்ணில் நீர் வழிந்தது. வகுப்பு முடிந்து நண்பர்கள் வந்து " டேய்..அவ உனக்கு சரிப்பட்டு வர மாட்டாடா.. லவ் ல இதெல்லாம் சகஜம் டா மச்சி" என்று உதவாக்கரையான புத்திமதிகள் கொடுத்தனர். மனது கேட்காமல் நைஸாக மாலை நேரம் அவளுக்குத் தெரியாமல் வீடேறிக் குதித்து என்ன செய்கிறாள் என்று பார்க்கப் போனால், வானொலியில் "கேளடி என் பாவையே - இலங்கை ஒலி பரப்புக் கூட்டு.."!
உறைந்து போனேன்! "அட..காலைல நாம பாடினா வாத்தியார் கிட்ட அடி வாங்க வெச்சா..இப்போ என்னடான்ன இந்தாளு பாட்டை கேட்டுகிட்டு இருக்கா ?!". அடுத்த நாள் போய் மெல்ல பேச்சுக் கொடுத்துக் கேட்டேன். "SPB பாடினா of course கேட்பேன். இன்னொரு தடவை வந்து இந்த மாதிரி பேசினே பிரின்சிபால் கிட்ட சொல்லிடுவேன்" என்று மிரட்ட பயந்து போய் அந்தக் காதலை மனதில் அழித்து விட்டேன்.
கேள்வி 5: நான் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்த பெண்ணை, உங்கள் குரலால் வசியப் படுத்தி, என் பருவக் காதலை அழித்தது சரியா ? எதற்கு இவ்வளவு அழகாகப் பாடுகிறீர்கள் ? பிறருக்கு சில காதலிகளை விட்டு வைக்கக் கூடாதா ?
கல்லூரிப் பருவம். மேடையேறி நம் பாட்டுத் திறமையை வெளிப்படுத்தினால் கொஞ்சம் மாணவர் வட்டாரத்தில் புகழ் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று முயன்று தோற்றேன். பாட வாய் திறந்த போதெல்லாம் - "டேய்..SPB எவ்ளோ உயிர் கொடுத்து பாடிருக்கார். நீ பாடினா அந்த மாதிரி இல்லைடா" என்று நண்பர்கள் உண்மையாக ஆனால் கொடூரமாகக் கூற எனக்கு வளரந்தது எரிச்சல். 'ஏன் இந்த ஆளு என் லைஃப் ல இவ்ளோ தொல்லை கொடுக்குறாரு ? இத்தனைக்கும் இவரை நேர்ல கூட பார்த்ததில்லை. இவரு பாடி வெச்சிட்டு போயிட்டதால இப்போ நம்மளை மாதிரி ஆளுங்க பாடு திண்டாட்டமா இருக்குது' என்று மனதுக்குள் ஆதங்கம்.
கேள்வி 6 : இவ்வளவு அழகாகப் பாடச் சொல்லி உங்களிடம் யார் கேட்டார்கள் ? உனக்கென்ன மேலே நின்றாய் ஓ SP பாலா..?!!!
பாடுவதற்கு முன், பாமரப் பாடகர்களைப் பற்றிச் சிறிதேனும் சிந்தித்தீர்களா ? அவர்கள் தங்கள் வாழ்க்கையில் யாரிடமாவது, குறைந்தது அப்பா அம்மாவிடமாவது பாடிப் பாராட்டு பெற்று சிறிது சந்தோஷப் பட வேண்டாமா ? அந்த நல்லெண்ணம் கூட உங்களுக்கு இல்லையா ? ஒவ்வொரு முறை பாடும்போதும் நீங்கள் எப்படி பாடி இருக்கிறிர்கள் என்று சுட்டி காட்டி பாமரர்களான எங்களது நிலையைக் கொடூரமாக புரிந்து கொள்ளவைக்கிறார்களே ? இது தேவையா எங்களுக்கு ?
கல்லுரி முடிந்து கடல் கடந்து வந்தாயிற்று. "அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா..தேசம் உனக்கு செஞ்சது ஏராளம் இங்கே உண்டு..தேசத்துக்கு நீ என்ன செஞ்சே உன்னக் கேட்டு நீ பதில் சொல்லு"..
கேள்வி 7: இந்தப் பாட்டை முக்கியமாகப் பாடி எங்களின் மனசாட்சியைக் காயப் படுத்தவேண்டுமா ?
தாலாட்டுக்களை திருடினீர்கள் பொறுத்தேன். காதலைத் திருடினீர்கள், பொறுத்தேன். இப்போது தத்துவமும் பாடுகிறீர்கள். வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் இப்படி என்னை உங்கள் பாடல்களால் விடாமல் துரத்த வேண்டுமா ? இது உங்களுக்கே நியாயமா ?
இனி எனக்கு காதலி கிடைத்து "எனக்கொரு காதலி இருக்கின்றாள் " என்று நண்பர்களிடம் சொன்னால், "செம பாட்டுடா..SPB கலக்கல்" என்பார்கள். எனக்குக் கல்யாணம் ஆனால் "நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணும்" என்று அங்கேயும் ஒலிக்க விடுவார்கள். என் மனைவிக்கு "கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே" என்று போட்டுக்காட்டுவார்கள். மனைவியைக் காதலுடன் பார்த்தல், அவள் "சென்யோரிடா ஐ லவ் யு" பாட்டை பாடச் சொல்லப் போகிறாள். பிள்ளை பிறந்தால் அது "தேனேதென் பாண்டி மீனே" கேட்கும்..அது இல்லாமல், மண முறிவு ஏற்பட்டால் " மன்றம் வந்த தென்றலுக்கு..நிலாவே வா"..
சரி லௌகீகம் வேண்டாம் ஆன்மீகம் போவோம் என்றால் அங்கேயும் துரத்துகிறீர்கள். சிவனைக் கும்பிட வேண்டும் என்றால் "பிரம்ம முராரி சுரார்ச்சித", கண்ணனைக் கொஞ்ச வேண்டும் என்றால் "ஆயர் பாடி". நான் இறந்து போகும் நேரத்தில் எனக்கு நினைவு வரப் போவதற்கு "மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது" என்று பாடி வைத்துவிட்டீர்கள். இப்படி வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் என்னை உங்கள் பாட்டுக்களால் பாடாய்ப் படுத்த வேண்டுமா ? அதனால்..
இத்தனை குற்றங்கள் செய்து என் வாழ்வினை முழுமையாக என் அனுமதி இன்றி ஆக்கிரமித்துகொண்ட உங்களுக்கு நான் என் மனச்சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கிறேன். உங்களுக்கு எப்போதாவது வெளியில் போய் விட்டு வரவேண்டும் என்றால் சிறிது நேரம் 'பரோலில்' அனுப்பி வைக்கிறேன். மற்றபடி என்னை உங்கள் பாட்டுக்களுக்கு நீங்கள் அடிமையாக்கியதற்கு பழிக்குப் பழியாக, என் மனச்சிறையினில் நீங்கள் அடைபட்டுக் கிடக்க வேண்டியது தான். அங்கே உங்களுக்கு 60 ஆண்டுகள் மட்டும் இல்லை. என் ஆயுளுக்கும் சேர்த்து தண்டனை அனுபவியுங்கள்.
தங்கள் அன்புள்ள
முரளி வெங்கட்ராமன்

Saturday, June 17, 2006

En kaadhale - From Duet

Song : En kadhale
Movie : Duet
Singer: S.P.B
Composer : A.R.Rehman

Performed by :Murali

I was in undergrad when this musical extravaganza hit the theatres. As usual, I did not care much for the movie but was charmed by "thangame thamizukkilai thattuppaadu". It had wonderful beats, nice beats and to top all that, it was an SPB number. But what finally settled in my heart as my favorite was en kaadhale. It is a mesmerizing rendition by one and only S.P.B. The bhaavam is unmatched ! A beautiful tune immortalized by the immortal singer!

have tried my hand - Let me know what you guys think.

Saturday, June 10, 2006

Rasathi unna kaaNadha



I think I was in 6th std that time. I went to see Vaidegi kaaththirundhaaL with my mom and grandpa. This was the opening song of the movie. Made me an instant addict to Jeyachandran's voice - an effect I have never been able to recover from that, I started a series on dhool about Jayachandran to hail his rare songs:

http://www.dhool.com/sotd2/catlist.php?catid=21

Today as a humble tribute to this melody giant, I present my version of Rasaathi unna. As usual it was dug out from the 3yr old archives. The karaoke was much faster than the original that, at one point it made me go breathless (ya..most of my songs are 1 take recording from the first to the last). You can find it too. Let me know if you guys like it.

Monday, June 05, 2006

War Theme - Instrumental




Wartheme - An old arrangement | Musicians Available

A war is a catastrophe. In this piece of music, I have tried to create a visualization for the war starting from the beckoning to the mourning. The war starts with the drums banging and the troupes marching in. Once the troupes face the enemies, out of sheer passion for victory and the thirst for blood they energize themselves with war cries and after that they start warring with each other. After a particular juncture the killing becomes so common and usual that their minds get numbed and they do it like normal work(the flutes). It is followed by the cruel mindless torture of innocents after the victory as they plead for mercy - but of no avail. All the killings are done without any heart.

A group of people who were untouched by the war since they were away come rushing and take a look at the battlefield and they are filled with anguish seeing the lacerated and amputated bodies with men and women crying out in Lord's name for help. Although they help the needy, they cannot control their weeping when they see vultures battling with them for the bodies - a stillness of burial ground.

Let me know if you guys are able to appreciate it. This was done entirely on the MOTIF ES 6. This was probably the second piece of music I did after getting the Keyboard.