Pages

Saturday, February 12, 2011

ஓலைமேல காத்தாக - Lyrics of one of my folk compositions

பல்லவி
=======

பெ: ஓலைமேல காத்தாக – என்
உசிர வந்து ஒரசுறியே

தரிசா கெடந்த என் மனச
தளிர வச்சு பாக்குறியே

எங்கேன்னு கண்ணுதானே ஏங்குறதே (ஏங்குறதே)..
நீ முன்ன வந்து நின்னா தேங்குறதே (தேங்குறதே)..

அட பஞ்சா என் நெஞ்சு..
பறந்தோடப் பாத்தாலும்
ஒரு தீயா உன் பிம்பம்
அதை தீண்டிப் பாக்குறதே..



ஆ: ஓலைமேல காத்தாக – என்
உசிர வந்து ஒரசுறியே

தரிசா கெடந்த என் மனச
தளிர வச்சு பாக்குறியே

சரணம் 1:
=====


பெ: கம்பளிப் பூச்சி போல
உன்மீசை அசையுதே
முண்டாசு முறுக்கு பார்த்து
முந்தி வழுகுறதே..

ஆ: கத்தாழம் பூவாசம்
மனசையே பிசையுதே
உன் கூந்தல் தூண்டிலுள்ளே
மனசே மீனாச்சே..ஓ..

பெ: கண்ணிமை நின்னு போச்சு
கன்னத்தில் வெட்கப் பூச்சு
உன் வலுவை பார்த்து பார்த்து
அசந்து போறேனே

ஆ: உன்னாலே இந்த மூச்சு
பார்த்தாலோ காலியாச்சு
உன் வடிவை பார்த்து பார்த்து
மாஞ்சு போறேனே

பெ: வளர்ந்த மரம் மேலே சாயும்
வளைஞ்ச கொடி போலே-உன்
பரந்த மார்மேலே படரும்
மெலிஞ்ச என் தேகம்

பல்லவி
====

ஆ: ஓலைமேல காத்தாக – என்
உசிர வந்து ஒரசுறியே

சரணம் 2:
=====

ஆ: மாவாலே கோலம் போடும்
மானே உன் கையுமே
எம் மார்பை கீறும்போது
நெஞ்சம் திறக்கிறதே

பெ: வண்ணத்துப் பூச்சி போல
இருதயம் துடிக்குதே
உன் சூட்டில் ஈரக்காத்தும்
போர்வை கேக்கலியே

ஆ: காடெல்லாம் வேலை செஞ்சி
களைப்புல கலயக் கஞ்சி
குடிக்கிற காலம் போச்சு - உன்
உதட்டைக் கொண்டாடி

பெ: முல்லப்பூ சூடி வந்து
பின்னலும் பொட்டு சாந்து
வைக்கிற நேரம் உங்க
கண்ணே கண்ணாடி

ஆ: கருத்த ராவினிலே மின்னும்
வெளிர்நிலா போலே - உன்
துருத்தும் மூக்கினிலே மின்னும்
பருத்த மூக்குத்தி

சரணம் 2:
=====

ஆ: ஓலைமேல காத்தாக – என்
உசிர வந்து ஒரசுறியே

பெ: தரிசா கெடந்த என் மனச
தளிர வச்சு பாக்குறியே

ஆ: எங்கேன்னு கண்ணுதானே ஏங்குறதே (ஏங்குறதே)..

பெ: நீ முன்ன வந்து நின்னா தேங்குறதே (தேங்குறதே)..

ஆ: அட பஞ்சா என் நெஞ்சு..
பறந்தோடப் பாத்தாலும்
ஒரு தீயா உன் பிம்பம்
அதை தீண்டிப் பாக்குறதே..

பெ: ஓலைமேல காத்தாக – என்
உசிர வந்து ஒரசுறியே
ம்ம்ம்..
ம்ம்ம்..

No comments:

Post a Comment