Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Thursday, November 24, 2016

Balamurali Krishna - A Tribute


1998. படிக்க அமேரிக்கா சென்று இருந்த நேரம். எனக்கென்று வாய்த்த சக அறைவாசிகள் (அதாங்க room-mates) ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு தினுசு. ஒருவன் கூட்டி வைத்த குப்பைக்கூளங்களைக் கூடையில் போடாமல் அப்படியே வைத்து விட்டு தன்னிலை மறந்து பொழிகின்ற பனியோடு பேசுபவன். மற்றொருவன் இளையராஜா இசையை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து அலசி இணையத்தில் போய்க் கதைத்து சண்டையும் போடுபவன். 

 மற்றொருவன் மிகவும் வித்தியாசமானவன். அவன் சமையலை குழந்தை சாப்பிட்டால் கூட “ரொம்ப சப்புன்னு இருக்கே” என்று முகம் சுழிக்கும் அளவுக்கு சுமாராக சமைப்பவன். அதோடு காகிதச்சுருள்களை மிகுதியாக இட்டு பாதாள கங்கையை ”சிரம பரிகாரம்” செய்யும் வேளையில் பல தடவை பெருக்கெடுக்க வைத்து அது வீடு முழுக்க விரிக்கப் பட்டு இருக்கும் தரைவிரிப்புகளை நனைத்து 1 வாரம் நிற்க நடக்க முடியாமல் செய்ய வைத்த புண்ணியவான்.

ஆனால் அவனிடம் ஒரு விசித்திர வழக்கம் இருந்தது. அவனிடம் ஒரு மிகப் பிரபல தமிழ் நாட்டு கர்னாடக சங்கீத வித்துவானுடைய பஞ்ச இரத்தின கீர்த்தனைகள் “கோஷ்டி கோவிந்தம்” முறையில் பாடப்பட்டு இருந்தது. எனக்கு அந்த வித்துவான் மேலே அவ்வளவு பெரிய ஈடுபாடு இல்லை. அந்த ஒலிநாடாவை தினமும் திரும்பத் திரும்ப போட்டு கேட்டு என்னையும் மற்றவரையும் எரிச்சலடைய வைத்தான். ஆனாலும் திரும்பத் திரும்பக் கேட்டதால் எனக்கு பஞ்சரத்தின கீர்த்தனைகள் மீது ஈர்ப்பு அதிகமாகியது. அதிலே முதலாவதான

“எந்தரோமா……….ஹானுபாவுலு”

வின் மெட்டு மிகவும் பிடித்துப் போயிருந்து. அதிலே ஒரு வரி:

“பா.. கவதரா…மாயண…..கீதா”

என்று வரும். மிகவும் கம்பீரமான ஒரு மெட்டு அது. தெலுங்கு மொழியில் சுத்தமாகப் பயிற்சி இல்லாததால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போதெல்லாம் கூகுள் கூட இல்லை. எனவே பாடல் வரிகள் எல்லாம் வேறு எங்கேயாவது தான் தேடிப்பிடிக்க வேண்டியதாக இருந்தது. இது கிடைக்கவே இல்லை. எனவே நெட்டுருப் போட்டு அங்கே இங்கே பாடிக் கொண்டு இருந்தேன்.. ஒரு நாள் இன்னொரு நண்பரின் வண்டியில் பயணப் பட நேர்ந்த போது அதே 5 கிருதிகளை திரு பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் குரலில் கேட்டேன்.

“பாகவத ராமாயண கீதா”

என்று பாடினார். அப்போதுதான் புரிந்தது என் முட்டாள்தனம். ”எந்த ரோமா” இல்லை “எந்தரோ மஹானுபாவுலு” என்று தியாகைய்யர் பாடிப் பெரியவர்களைக் கவுரவித்து இருக்கிறார் என்று புரிந்தது. தெலுங்கு அறியாமல் தவறாகப் பாடிய ஒருவர் மூலமாக பிழைபட்ட வரிகளைக் கற்று வைத்திருந்தேன். அன்று தான் ஒரு கர்நாடக சங்கீதப் பாடலுக்கு வரிகள் தெளிவாக இருத்தல் எவ்வளவு அவசியம் என்று புரிந்தது. அன்று முதல் பாலமுரளி அவர்களின் பாடல்கள் எனக்கு பல வகுப்புகள் எடுத்துக் கொண்டு இருக்கின்றன..அந்தக் குருவிற்கு இச்சிறியோனின் வந்தனங்கள்.

Thursday, August 25, 2016

My composition : Akhiya Tarsa- Meera Bhajan - Raag Hansvinodini

Song : Akhiya Tarasa
Raag : Hansvinodini / Hamsavinodni
Composed and Sung by : Murali Venkatraman


On this day of Gokulashtami, I thought I could share this composition of mine in the rare raga hamsavinodini. Given the paucity of time to record with elaborate arrangements, I am presenting only a simple rendition captured on a cell-phone backed up by shruti-box. Someday one my lady-singer friends may embrace the song and deliver it much more smoothly :)
Please let me know how you like it.

Lyrics:
अखयाँ तरसा दरसण प्यासी
अखयाँ तरसा दरसण प्यासी।।टेक।।
मग जोवाँ दिण बीताँ सजणी, णैण पड्या दुखरासी।
डारा बेठ्या कोयल बोल्या, बोल सुण्या री गासी।
कड़वा बोल लोक जग बोल्या करस्याँ म्हारी हांसी।
मीरां हरि रे हाथ दिकाणी जणम जणम री दासी।।
(तरसा=तरस रही है, दुखरासी=दुःखों का ढेर,
अत्यधिक दुःख, डारा=डाली, गासी=दुःख से भरा हुआ)

Sunday, May 29, 2016

கண்ணன் பாடல்கள் - 6 - கொன்றை மலர் கொய்து

Song: Kondrai Malar Koythu - கொன்றை மலர் கொய்து
Composition, Lyrics, Orchestration and Vocals: Murali Venkatraman
Raagam :  Madhyamavati
Mixing : Swamy Kitcha

கண்ணன் பாடல்களில் பல உணர்ச்சிநிலைகள் உண்டு.  தோழனாய், தந்தையாய், மகனாய், காதலனாய் பலரும் கண்ணனைப் போற்றியதுண்டு.  இந்தப் பாடல் தன்னிடம் கருணை காட்டாத கண்ணனால் ஒரு மனம் நொந்த  பக்தனின் புலம்பலாக இங்கே தந்திருக்கிறேன்.  இந்தப் பாடலை எழுதி மெட்டமைத்து கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு மேலாகி விட்டன.  இப்போதுதான் இசைக்கோர்வையுடன் பாட ஒரு வாய்ப்பு கிட்டி இங்கே பகிர்ந்துள்ளேன். இதை முறைமையுடன் தன் நேரத்தைச் செலவழித்து சரியான இசைக்கலைவையாக்கிய திரு சுவாமி கிச்சாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

பெரும் செல்வந்தர்களை அழகிய கொன்றைப் பூவோடும்,  எளிய பக்தனைத் துளசி இலையோடும் ஒப்பிட்டு எழுதி இருக்கிறேன்.

===


கொன்றை மலர் கொய்து உன்முன்னிலே
கொட்டிக் குவிக்கின்ற பலர் தம்மிலே
ஒற்றைத் துளசியிலை போலுன்னடி
ஒற்றி நடக்கின்ற எனைப் பாரய்யா

அன்று சுதாமனுக்கு வாழ்வளித்த மாலவா
இன்று இவ்வதமனுக்கு அருள் செய்ய வா
நீ வரவில்லையேல் அருள் தரவில்லையேல்
உனை வரும்படியே தாயை உலுக்கிடுவேன்
உன்னைப் போல் அல்லாது அவள் கருணை வடிவம்

சிந்தும் கண்ணீர்த்துளி சாகரமானதே
கொஞ்சி கெஞ்சி விம்மி நொந்தேன்
கல்போன்று நிற்பவனே கரைவாய் மனம்
கைலாய நாதன்போல் தருவாய் வரம்
அடேய் ! உன்னை நான் வேண்டி
கூன் தாங்கி வலி வந்ததே !
உன்னாலே ஓரின்பம் மண்மீதில் நான் கண்டே
நாளானது என்ன சோதனை ?!


Sunday, April 17, 2016

மையறு மலரின் Kambaramayanam - கம்பராமாயணம்

I was asked by Jeiram Jegatheesan to compose and render a few select verses of Kambaramayanam.  Here is one.

Song: Maiyaru malarin
Composed, Arranged and Rendered by : Murali Venkatraman



மையறு மலரின் நீங்கி, யான் செய் மாதவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று செழுமணிக்கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்த கடிநகர், கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வாவென்று அழைப்பது போன்றதம்மா !!

நிலமகள் முகமோ! - Kambaramayanam - கம்பராமாயணம்

I was asked by Jeiram Jegatheesan to compose and render a few select verses of Kambaramayanam.  Here is one.

Song: NilamagaL mugamO
Composed, Arranged and Rendered by : Murali Venkatraman


நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ!
நிறை நெடு மங்கல நாணோ!
இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின்
இருக்கையோ! திருமகட்கு இனிய
மலர்கொலோ! மாயோன் மார்பில் நன் மணிகள்
வைத்த பொற் பெட்டியோ! வானோர்
உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி
உறையுளோ! யாது என உரைப்பாம்?

Pachchaimaa Malai - பச்சைமா மலைபோல் - A rearrangement

Song : Pachchaimaa Malai - பச்சைமா மலைபோல்
Composer : K. V. Mahadevan
Rearrangement and Singing : Murali Venkatraman

This song is a beautiful composition rendered by Shri.  T.M Sounderarajan under the music direction for Shri. K.V. Mahadevan.  I took the liberty to rearrange the song and has sung it my way.



Light music (Karaoke) concert for Ilakkiya's Birthday - Oct 2015

I performed a Karaoke Light music concert with Aruna Parthiban at Ilakkiya's Bday (Radio Broadcaster Kanaprabha's daughter) Celebration.  Here is a snippet

Song : தூளியிலே ஆட வந்த - thooLiyilE aada vandha
Cover by : Murali Venkatraman








Ghazal Concert for Pakistani and Indian Audience at Dural

I gave a ghazal concert to a mix of Pakistani and Indian audience after Eid-Al-Fitr in July 2015.  Here is a glimpse of the many songs that were sung on that day.


Thanks to Mustafa Vasi for arranging this concert.