Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Thursday, December 30, 2004

கண்ணன் பாடல்கள் - 1 - வாடும் பயிரினையே கண்ணம்மா

கண்ணன் பாடல்களில் கண்ணம்மாவிற்கு காதல் கடிதம் தந்தவர் பாரதியார். அந்த மேதை எழுதியது போல் இல்லாவிடினும் அச்சாயலில் எழுத முனைந்து நான் எழுதிய ஒரு படைப்பு

வாடும் பயிரினையே கண்ணம்மா
வாழ்த்திடும் மழையினைப்போல்- உனை
நாடும் உயிரினுக்கே நீயுமே
நல்முகம் காட்டாயோ ?

ஓடி ஒளியாதேடி என்முகம்
உன்னழகில்லை என்று - நீ
சூடிய தாமரையும் சேற்றில்
சுகமாய் இருந்த ஒன்றே.

மேனி வைரமடி கண்ணம்மா
மின்னுதென்று உனைப்புகழ்ந்தால்
தேனிசை சொற்களினைக் கொட்டாது
தேனி போல் கொட்டுகின்றாய்

நடையின் நளினங்களை கண்ணம்மா
நான் கண்டு மூச்௪¢ரைத்தேன் - அந்த
இடை கரம் இவை இடையே கதிரோன்
இடறுதல் நான் ரசித்தேன்

சொல்லினில் கடுமையுண்டு கண்ணம்மா
கண்ணிலே கருணையுண்டு -இது
கள்ள மழை பெய்து சூரியன்
கனல்தரல் போலன்றோ ?

என்னைத் தள்ளாதேடி கண்ணம்மா
என்றுநான் கெஞ்சி விட்டால் - நீ
அன்னை போலிரங்கி என்மனம்
ஆறிடச் செய்திடுவாய்.

கண்கள் கிடக்கட்டுமே கண்ணம்மா
கால்களை போலுனது
அங்கமெதிலும் ஒரு உயர்வையும்
அழகையும் கண்டதில்லை.

2 comments:

  1. Excellent poem.. choice of words superba irukku.. Feels like reading Bharathiyar's.. congrats..
    Lalitha Swaminathan

    ReplyDelete
  2. Sushane7:35 AM

    Wow... Great poem Murali Anna... watever little i understood i loved it :-)

    ReplyDelete