Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Thursday, February 09, 2012

விரகம் - 4 - "கவிதைகள் வரையும் கைகளின் விரல்கள்"

An online friend Aisoorya Vijayakumar composed a song for which she requested I write lyrics.  The project has been dormant for a while and in the meanwhile I thought I could share just the lyrics I wrote.

பல்லவி
=======

கவிதைகள்  வரையும்  கைகளின்  விரல்கள்
கண்களைப்  பறித்தல்  கூடாது

காதலில்  பூக்கும்  மனமது  தனிமை  
காட்டுக்குள்  கருகல்  கூடாது


அனுபல்லவி
==========

கடல்பால  தாண்டி  நிலம்பல  தாண்டி
காதங்கள்  பல  நீ  கடந்தாயே

கருவிழி  அடியில்  கருவளையம்  நான்
காலங்கள்  காப்பதைக்  காட்டுதுவே

சரணம்
======

நீ  மறுமுறை  என்  விழியினிலே  நுழைவதில்  தாமதமா  ?
உன்   தொடுகையின்  முன்  மலர்வளையம்  என்னுடல்  தீண்டிடுமா  ?

கண்ணின்  இமை  மேகமென
கண்ணீர்  மழை  பொழிகிறதே
நெஞ்சின்  இடிபாடுகளில்  -சுடும்
காற்றாய்ப்   புகும்  உன்  நினைவே

கனவுகள்  மனதினில்  சுவடுகள்  ஆகும்
சுவடுகள்  வலிதரும்  வடுவென  மாறும்

இறுதி  மூச்சின்  முன்னே  வா !

hook:
====

காதல்  என்பது  சுகமா  ? -அதில்
காத்தல் இன்பமும்  தருமா  ?

No comments:

Post a Comment