Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Thursday, September 29, 2005

Audio post - Pramadhavanam - Karaoke experiment




Any guy with a little singing impetus and some mallu blood is bound to be lured into singing some of the great hits of Yesudas. In the 90s, the song that rocked every malayali's house was "Pramadhavanam". I do not really know if KJY won a national award for this or not. I have heard people say MGS won the award for NaadharoopiNi of the same film. Nevertheless, His Highness Abdullah is a masterpiece of Late Raveendran with breathtaking vocals by all lead singers. My first tryst with HHA's song was in DAV rhapsody 1994 when sambasivam sang "devasabathalam" with Ganesh on mrudangam. Sambasivam was kind of an icon at DAV. He had been attending DAV from his first grade and was a very popular guy due mainly to his singing skills. When I heard this song on stage for the first time, I thought it was nice. I was not very impressed by Sambasivam's rendition though the whole school gave a rapturous applause when he had finished. I never sang in DAV and was known to be a singer only to balagopalan, who till date is one of the closest friends I have ever got.

But later when I heard the original of HHA in the third year of my college, I was stunned by the breathtaking work. Though I have always been familiar with mallu songs from my birth, HHA changed my perspective completely and urged me to start exploring them further. Pramadhavanam became an instant hit in my mind and I started listening to a lot of mallu semi-classicals, influenced primarily by it. After a long self-learning, I decided to attempt singing these songs with or without karaoke and on stage. This version you hear was recorded 2 years back. Let me know what you think. The quality is kept low to minimize file size.

Saturday, September 24, 2005

Audio post - My compositions -1 - IsainaadiyE

I have been composing for almost three years. As many as 200 songs have been composed and sitting pretty to be released as an album. I shall write later about some of the nice experiences that I have had in this process of composing. Today, I am presenting here, a song composed by me with the lyrics of Udhaya in a classical mode in raga hindholam.

The song:
---------

this is an audio post - click to play

The file is in real media format. I am not formally trained in classical. Hence my rendition is sketchy. Carnatic jambawans - please pardon :-)

The making:
-------------

This pallavi and charanam 1 were pre-written by Udhaya which I set to tune. I needed one more charanam to "culminate" and Udhaya came up with brilliant lyrics for a tune I gave for second charanam. I feel extremely good to see such beautiful tamil and I am honored in every sense to have Udhaya's beautiful lyrics to sing/compose. Sometimes the usage of tamil is so impactful that it hardly gets out of my mind thereby hindering my concentration in other worldly chores. Thanks Udhaya. Pass your comments freely folks.

Lyrics:
-------

இசை நாடியே இங்கு உனக்காகத் துடிக்கும்
உயிர்காற்றைச் சுரக்கும்
விழிநீரை உகுக்கும்
முகமிங்கு அகமங்கு
அறிவால் அறிவாய்
உடலால் பிரிவாய்
எனை தினம் தொடர்ந்திடு நிழலென

சரணம் 1:
=======
கலையாலே கிடைத்தாய் வரம் கொடுத்து எடுத்தாய்
சுய நினைவின் திசை மாற்ற மது ரசம் வசம் இருந்தேன்
வழிவகுத்துக் கொடுத்தாய்
கலையை விட உயர்ந்து நின்றாய்
கலையினும் உயர்ந்தாய் கலைஞனுக்குயர் தாய்
சேய் என்று அழ நான் நன்றி சொல்ல
கரை தோய்ந்த குறை மறந்து திரை எடம்மா

ma,ga,ma ,mdmgmdm ga,ga,ga, gamadam
sa,sa,n#s ga,ga,sg mama ;; mama ;gm
dada dndm gada dndm SGMGSGSn Sndni mdn
sn# gs mg dm nd Sn GS nS
sssdad mgma Snd mdn

(இசைநாடியே)

சரணம் 2:
=======
ஆகாயமே ஒளியில் மலர்ந்திடினும் மேகம் கதிரை மறைக்கும்
சாமானியனின் கலைச் சரிவினிலும் கலையின் சாரம் தவிக்கும்
ஆதார ஷ்ருதி அந்து போனதடி அன்று உன்னைப் பிரிந்து
ஆவேச நிலை இன்று போனதடி உந்தன் வருகை தெரிந்து
பருகிடப் பெருகும் அமுத சுரபி
கலைஞனின் மனதில் இசை எனும் அருவி
காணாத இன்பமேது கலையின் மடிமீது வாழும்போது
காட்டாறு கலையின் பாதை கருணை என்றென்றும் காட்டிடாது
கானம் போயும் ஒரு வித மானம் போயும்
என்னைக் காப்பாற்றிட வந்தாயே

The transliterated version is here:

Pallavi:
=======

isainaadiyae ingu
unakkaaga thudikkum
uyirkaatraich churakkum
vizineerai uthirkkum
mugam ingu agam angu
arivaal aRivaai
udalaal pirivaai
enai thinam thodarndhiru nizalena
isainaadiyae

Charanam 1:
===========

kalaiyaalE kidaiththaai varam koduththu eduththaai
suya ninaivin thisai maatra madhurasam vasam irundhEn

vazhivaguththu koduththaai kalaiyai vida uyarndhu nindraai
kalaiyinum uyarndhaai kalaingyanukku uyar thaai

sEy endru azha
naan nandri solla

karai thOyndha kurai maRandhu thirai edammaa

ma,ga,ma ,mdmgmdm ga,ga,ga, gamadam
sa,sa,n#s ga,ga,sg mama ;; mama ;gm
dada dndm gada dndm SGMGSGSn Sndni mdn
sn# gs mg dm nd Sn GS nS
sssdad mgma Snd mdn

Charanam 2:
===========

aagaayamae oLiyil malarndhidinum mEgam kadhirai maRaikkum
saamaaniyanin kalaich chaRivinilum kalayin saaram thavikkum
aadhaara sruthi andhu pOnadhadi andRu unnaip piRindhu
aavaesa nilai indRu pOnadhadi undhan varugai therindhu

parugidap perugum amudha surabi
kalaingyanin manadhil isai enum aruvi

kaaNaadha inbamaedhu kalayin madimeethu vaazhumbOdhu
kaattaaru kalayin paadhai karunai endRendrum kaattidaathu

gaanam poyum endhan maanam poyum ennaik
kaappaatRida vandhaayae

Thursday, September 22, 2005

Battling complacency

The biggest battle a graduate student faces before finishing up his thesis is the war that goes in his mind. His mind is split into two - one craving for the degree and another absolutely uninterested in doing the write-up part which unlike creative writing is laborious and uninteresting. If it is further fueled by some other addictions and distractions, Newton's laws of graduation start applying themselves in full swing and he is debilitated.

I am facing exactly a similar situation. All the work towards my Phd are staring at me to be written in the form of papers. But guess what ? When I see them, I feel they are not mine. Though they are the children that I produced, a sense of disowning has come into me. They are not mine any more. I do not want to make them into readable documents. The reason is that it is simply too laborious. So ? Procrastinate. Coupled with this is the fear of imperfections. What if this paper is not well written ? What if it is not accepted ?

Coming to think of it, I think it is really abysmally bad on my part not to have done it since, this is the only step that is left for me to get a degree. This is the only thing that is preventing me from getting a good job. One that makes me crawl financially while all my friends have been well settled towards life and projecting promising futures.

In this purtsuit of my PhD I have come to understand many of the qualities that have made me till today.

(1) Fear of failure

This is something I am not able to get over with. Be it singing a song, conducting an orchestra or writing an algorithm or giving a presentation - I shudder to think of myself as a failure and this has two diagonally opposite consequences - (2) and (3)

(2) Inactivity and procrastination

The fear of failure makes me popstpone things. This brings inactivity. This brings procrastination. This makes me not do perform those chores which I do not like, with a great efficiency. A good example is when I found that two of the algorithms that I created worked all the way uptil the last point. Even though I persisted with them, I could not make a breakthrough. This very situation usually puts me into inactivity. Not that I do not challenge myself, but because of all the accumulated past exeriences, I get bogged down when the end result does not come the way I expect resulting in inactivity. I donot want to do it since I fear I have failed in it.

(3) Overworking and trying to do justice to the image

I go on a complete overdrive sometime. This always happens with the things that I love the most. Music and mathematics - I go absolutely overboard. In case of music, I spend hours contemplating the styles and notes of the songs. When it comes to performing with the orchestra where I usually don the role of orchestra coordinator, I drill everybody, the most drilled being myself. I have heard people complain that I demand 100 % perfection. Well, true - at the end of the day because of talking and singing I have spat blood sometimes. My thorat goes so sore that I practice silence for atleast 3 days to get my voice back.

Regarding mathematics - yesterday when my friend casually presented me with a series summation problem, I had to do it. I am already known among my friends as a guy keenly interested in mathematics. Now that is some pressure - this problem had been solved with great difficulty over a period of 20 mins by two people. Now that I have been given that problem, I needed to live upto the image - I had to solve it. This occupied my head for the rest of the afternoon and unless I could come up with a clear solution, I could not sit calm. Well, I solved it within probably 45 mins.

What did I prove ? Did I prove to myself that I could do it ? Did I prove it to make my pride swell ? I think I did. I think I calmed my pride. I gratified my ego.

(4) tendency to get distracted

This is the highest when I am working on things I do not like. Committment is that last thing that I have towards anything that I do not like but still have to do. Even with meditation, until I sit I do not want to sit. And once I sit, the calmness is so beautiful that I do not want to come out of it. Thus once I like it, I do not get out of it. And if do not like it, I do not like to get into it and do not like to remain committed to finish it be it even of grave importance.

Presently I like writing this blog than doing my papers and that is why I write this blog. Sometimes I wonder how I could possible rectify myself. I am battling my own self. One part of mine says - man you need to get better - while another part of me which is lackadaisical and lethargic does not pay heed to it. I wish the former wins, for which I think will need a strong committment - the antonym of lethargy.

Tuesday, September 20, 2005

P. Susheela Pictures - 2


Once in a lifetime photo...

My audio posts

All my audio posts are listed here sequentially with their links.



  1. Blogswara - Aavarthana Concert Videos 1, 2, 3, 4 and 5
  2. Teasers 1, 2, 3 and 4
  3. Neeraaduvaan
  4. Ding Dong Kovil Mani- A duet with Srividya
  5. Viziyil vizundhu
  6. Poththi vechcha malliga
  7. Chinnamanik kuyile
  8. Madi saayndhidum - tamil version of rhim jhim gire sawan
  9. An audio letter to SPB on his 60th b'day
  10. En kaadhalE
  11. rasathi unna kaaNadha
  12. War Theme - Instrumental - My composition
  13. Theme of blogswara - my composition
  14. Alaikadal
  15. Aisi Bheegi Bheegi
  16. Sendhamarai - My composition - Vocals by Mux, Meera
  17. Thendrale Thendrale
  18. Poonkadhave thaaz thiravaay
  19. Kaatrinile varum geetham
  20. Oh Butterfly
  21. Mandram vandha
  22. ennai yaarendru eNNi
  23. ThEnE thenpaaNdi meenE
  24. Charukeshi on Veena - Sheela Raman
  25. Nakshatra DeepangaL
  26. Kavidhai arangerum nEram
  27. Thaamasamende Varuvaan
  28. Devasabathalam - A stage experience
  29. Swara raaga sudha - andha 7 naatkaL
  30. A flute piece in shudhdha saaveri - MOTIF sequenced
  31. Oru paadalai pala raagaththil
  32. Vedham nee iniya naadham nee
  33. Indhak kaadhal - My composition - Narayanan Venkitu's lyrics
  34. Aayiram kaNNumaay-Malayalam
  35. Un paarvaiyil Oraayiram
  36. Neelavaana Odaiyil
  37. Thikana na - Bengali Song
  38. Nilavu thoongum nEram
  39. Geetham Sangeetham
  40. Pramadhavanam- Malayalam
  41. IsainaadiyE - My composition
  42. Neeraaduvaan- Malayalam
  43. SangeethamE - Malayalam
  44. Nilaave vaa
  45. Theertha karaiyinilE


My P.Susheela blogs

I performed a full fledged concert with P. Susheela on 28th August 2005. I have shared some experiences, pictures and videos. You can find them all here:
Experiences:
=========
Pictures:
======
Videos:
=====

Saturday, September 17, 2005

Arun's movie ventures

My friend Arun Vaidyanathan is a person with unquenchable enthusiasm for many things in life. He writes, directs, acts, comperes, does mimicry - a person on the move always. Apart from his regular software job, his pursuit of his passion namely making short movies, has won him wide appreciation from critics and some due recognition by media. His movie "Brailliant" has been chosen to be aired by Mania TV and he is all agog about it. I wish him more success in his future endeavors.

One project that he wanted me to work on was the movie "powercut". He insisted I compose the background. music. I remember composing some thematic group violin piece hearing which he said : "Hey man this music reminds me of the pathetic dramas which used to be aired in DD in the early 90s and late 80s". I realized that it indeed was. So, I asked him for more time and I composed the BGM. He was very happy with the BGM and suggested that I add it to the movie. That is when I realized that I had no expertise in doing audio mixing for movie. What I had at that time was a laptop with a stupid soundcard and a Yamaha EX-7 (which was not mine either - well graduate students do not own big gadgets except may be a digital camera). We both were deeply saddened by my 'state of art' and he was wondering what could possible be done.

I directed him to Jay Krishnan, an NJ based composer whose composition "paniththirai poongavil" that he shared at tfmpage was beautiful. The sound balance was awesome and Radhika had rendered it brilliantly. Arun approached JK and finally JK ended up composing an entirely different music for the movie which was appreciated later by the critics. Hope I get to work with Arun in one of his coming projects for which I need to equip myself better. Wish him all good luck with his new ventures !! Way to go arun !

BTW, Arun and I have never met.

Friday, September 16, 2005

கண்ணன் பாடல்கள் - 2 - வேண்டினேன் உனை வேண்டினேன்

கண்ணன் பாடல்களில் குழந்தை கண்ணன் பல ஆயர் குலத் தாய்மாரை வசீகரித்து இருப்பதாக சொல்லப் படுகிறது. முக்கால்வாசி பாடல்களில் அவன் வந்து வெண்ணையை திருடி உண்டான், அதை நான் கண்டும் காணமல் விட்டு விட்டேன் என்று சொல்வது போல் அமைந்து இருக்கும். என் மனதில் ஒரு சிறிய கற்பனை.

ஒரு ஆயர் குலத் தாய், தன் பிள்ளைகள் தாயமுது உண்ணாமல் சண்டித்தனம் செய்வதை நினைத்து வருத்தப் பட்டுக்கொண்டு இருக்கிறாள். அப்போது கண்ணன் தவழ்ந்து அங்கே வர அவளது தாய்மை பீறிட்டு எழுகின்றது. அதன் விளைவாக அவளிடம் பால் சுரக்கின்றது. குழந்தை கண்ணன் அதனை கண்டு வந்து பருகுகின்றான். இக்காட்சியைக் கண்டு அத்தாயின் பிள்ளைகளும் ஓடி வந்து பால் அருந்துகின்றன. இதை கண்டு அவள் மிகவும் ஆனந்தப் படுகிறாள்.

உண்ட பின்னே அக்குழந்தைகள் கண்ணனோடு அவள் உடல் மீதேறி விளையாடும் போது கடைவாய் நீர் வடிகின்றது. அதனை காணும் அந்தத் தாய் மனம் மிக மகிழ்ந்து "தாய்மையின் இன்பங்கள் தான் என்னே! அதனை கண்ணன் மூலமாக இன்று முழுவதும் அடைந்தேன். யசோதா, இப்படிப்பட்ட கண்ணனை சில நேரம் தினமும் எனக்குக் கடனாகத் தருவாய" என்று கேட்கிறாள்.

இந்தப் பாடலை ஆபோகி ராகத்தில் மெட்டமைத்தும் இருக்கிறேன். அதனைப் பின்னர் தருகிறேன்.

பல்லவி:
========

வேண்டினேன் உனை வேண்டினேன் - தினம்
கண்ணனை சில நேரம் கடனாகத் தா - யசோதா

சரணம் 1:
===========

நீ அறியாமல் அவன் என் வாயிலில்
கொலுசுகள் குலுங்க தவழ்ந்து வந்தான்
நான் அறியாமல் என் தாய்மையும் கிளர்ந்து
பாலினைப் பொழிய பருகி நின்றான்

எந்தனின் பிள்ளைகள் அவன் செயல் பார்த்து
வந்தன தங்கள் வன்பசி போக்க

கண்ணனால் அவரும் உண்டு மயங்கிட -என்
கண்ணிலே ஒர்குளம் ததும்பி வழிந்தது

சண்டியப் பிள்ளைகளும் சமர்த்தென ஆனது

சரணம் 2:
===========

பிள்ளைகள் எல்லாம் உண்ட பின்னெ - என்
உடல்மீதேறி அமர்ந்தனவே
கண்ணனும் மெல்ல ஏறி நின்றான் -தன்
பிஞ்சு பதங்கள் வைத்து நின்றான்

எந்தனின் பிள்ளைகள் அவன் செயல் பார்த்து
நின்றன தாமும் தன் பதத்தாலே

கண்ணனும் பிள்ளையும் கால் கொண்டு உதைத்திட
கடைவாய் அமுத நீர் கசிந்து விழுந்திட

தாய்மையின் சிகரங்கள் நான் கண்டேன்

Thursday, September 15, 2005

Making of Thiruvasagam in symphony - DVD review

Finally the much awaited DVD of TIS arrived. I had been very eager like a child to see what is in it since I had been hearing the grandeur of project and the grand music for quite long. I could hardly wait to pop it inthe DVD player to see how Ilaiyaraja has collaborated with the West to produce such a complicated score. I wanted to see how the western musicians felt when they were playing IR's music. Would they feel eerie ? exotic ? or may be chaotic and uninterpretable when they hear it for the first time ? How were the Madras singers used along with symphony orchestra ? What was it that really made IR comment that none other than himself could do justice to the "kaalapramaaNam" of all the songs ?So many questions lashed my mind as I started viewing the DVD.

After viewing the entire DVD, I was left with a feeling of partial satisfaction. I wanted more details on the songs making. I got probably just 10 % of what I expected.

Firstly, the DVD has a lot of complimentary talks of Bharathiraja which did not make a good impression. It is of course important that we get to know about the press conferences and opinions. But when you create a DVD of making of a project, the focus must be, in my opinion, more on the project and the details of it rather than the compliments that follow it. The compliments bordered on magnified adulation which I think, would have been better off being used like salt rather than bread. In other words, they could have been peppered all the way through to boost the value of the project. In stead they appeared to be the sole intention of the video.

Secondly, the explanations of IR were minimal. But in one case, namely where he explains how he impressed on the orchestra that some of the repetitive notes that they were playing would sound good when the vocals would be added were really nice, but short. Off all the songs, only "poovar senni" was shown as an example. They showed a minimal amout of choir activity. But it may be recollected that track 2 which is "pollaa vinaiyE" had the most breathtaking acapella which recevied no coverage. track 5 - muththu natramam" - which has a good usage of drums did not figure.

Thirdly, the contribution of Indian choir was not videographed. This, I believe is a little unjust, since they have had a main portion in the entire project. The very negligience towards the Indian choir tells me that, they were treated just as they would be for any normal tamil film song recording. Or in other words, recording with them was considered an exercise similar to a tamil film song which, as is oft iterated, this project is clearly not. Recognition of the local artists through a little video coverage would have made it more enjoyable.

The opinions of the orchestra were pooled in. Most of them being hungarians and alien to English managed only a little to tell us what they exactly felt. A translator in this case would have helped. It was ridiculous to see captions for the english that the orhcestra people spoke since it was easy to understand and simple. But they were clearly not expressing themselves fully. It would have been better if they had been allowed to talk in their vernacular with english subtitles as they speak.

Overall, the DVD entertains a little but leaves you with the feeling of wanting more

Monday, September 12, 2005

Audio post - Neeraaduvaan aalaap



This song "neeraaduvaan" by KJY is from the movie NakakshathangkaL. The composer of the movie - Bombay Ravi - is a true fan of raga mohanam. He tuned 3 songs in the same raga in that movie. A detailed writeup by me on Bombay Ravi adn thsi particular song can be found here:

http://www.dhool.com/sotd2/567.html


A year back when I was listening to this song, I was so inspired that I chose to give a raw try on the aalaap. That is what you hear today.

Saturday, September 10, 2005

P. Susheela Pictures

These are some pictures from susheelaamma's concert.

(1) Those moments..to be frozen in time..








(2) Susheelamma devliering "maaNikka veeNaiyendhum" as the opening song:



(3) Me feverishly gripped with anxiety as I conduct the orchestra



(4) Bowing before greatness



(5) A beaming Susheelamma



(6) Sharing a stage secret



(7) A happy bharathan



(8) Susheelaamma with Tarang junior orchestra:



(9) A team effort - mama mama song



(10) Punnagai mannan poovizi kaNNan - wiht Jamunamma



Friday, September 09, 2005

Audio post - SangeethamE - A try with Karaoke


This was also recorded probably a year back casually with a karaoke track, computer and mic. The song is a semi-classical number from the film "Sargam" originally delivered by K.J.Yesudas

Audio post - Nilaave vaa - A try with karaoke

High Qual:



Low qual :


Nilaave Vaa



Recorded probably a year back casually with a karaoke track, computer and mic. Let me know what you feel.

Test audio post - theertha karaiyinilE

http://dhool.com/ms/jam/theertha.wav

Hi folks - this is a test audio post. The song is "theerththa karaiyinilE" recorded not in a very high quality. It was recorded almost 2-3 yrs back using goldwave. I cannot say I have sung the way SPB had sung in the original. I was causually singing /improvising.

Wednesday, September 07, 2005

P. Susheela videos - 1 - Practice Sessions

Two practice session videos are available for download:

Direct download links on dhool (low qual):

(1) aadhi manidhan - http://www.dhool.com/ms/msps1.wmv
(2) kaatru veLiyidai - http://www.dhool.com/ms/msps2.wmv

Rapidshare links for high qual clips:

(1) Kaatru veLiyidal kaNNammaa: http://rapidshare.de/files/4799428/Prac-kaatru.mpg.html

(2) aadhi manithan: http://rapidshare.de/files/4800840/Prac-aadhi.mpg.html

These files are on rapidshare servers. Once you click the link, it takes you to a page where it asks for "free" or "premium" account. choose "free". It asks you to wait for some seconds. Please wait. Once the waiting time is over, the link for download appears. Do a "save target as".

However there is a limitation that rapidhsare servers do not allow you to download more than 20 MB within an hour. My suggestion would be to to download the low quality clips first and high qual clips later.

Monday, September 05, 2005

P.சுசீலாவுடன் ஒரு பாடல் நிகழ்ச்சி - part 9

மேடைக்கு வருமுன் இருவரின் ஆசியையும் குழுவினர் எல்லோரும் பெற்றோம். எல்லா பாடல்களும் sequencing முறையில் கையாளப் படுவது சுசிலாம்மாவிற்கு சற்றே புதிய அனுபவம் போலும். அடுத்த முறை கட்டாயம் பாடல்களை live ஆக செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். நானும் உறுதி அளித்தேன். கச்சேரி மாணிக்க வீணை பாடலோடு ஆரம்பமாகியது. மிக அழகாகப் பாட ஆரம்பித்தார். ஆனால் இது முன்னரே பதிவு செய்யப்பட்ட தாளகதி (timing) என்பதால் சற்றே தாளம் விலக, ஜோஸிடம் முன்னரேயே பதிவு செய்யப்பட்ட இசைக் கோர்வைகளை வாசிக்காது கையால் வாசிக்கும் படி சமிக்ஞை செய்தேன். interlude களுக்கு மட்டும் முன்னரே பதிவு செய்யப்பட்டதை வாசித்துவிட்டு மற்றதை எல்லாம் live ஆக வாசித்து சரியாக பொருத்தினார் அவர். பரதன் மற்றும் ப்ரணவ் இருவரும் துல்லியமாக கேட்டுக் கொண்டெ வாசித்து வந்தனர். 70 வயது பெண்மணியா பாடுவது என்ற மலைப்பைத் தந்த சுசீலாம்மாவிற்கு பார்வையாளர்கள் கைத்தட்டலுடன் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

அதற்கு அடுத்து ஆலய மணி பாடல் தொடர எல்லா வரிகளும் மிகச் சிறப்பாக பாடி முடித்தார். ஜமுனாம்மாவிற்கு பாடல்கள் கம்மி என்பதால், 3 சுசீலாம்மா பாடல்கள் நடுவே அவரது பாடல் வருமாறு வரிசை அமைத்து இருந்தேன். காளை வயசு பாடலை பாட ஜமுனாம்மாவை மேடைக்கு அழைத்தேன். அப்போது சுசீலாம்மா :

"ஜமுனா எனக்கும் senior (field ல்) முறையாக பார்த்தால் அவர் தான் முதலில் பாடவேண்டும். மாணிக்க வீணை இருப்பதால் நான் பாடும்படியாக ஆகிவிட்டது" என்று அழகாக முன்னுரை தந்தார். அதற்கு ஜமுனா "சுசீலாம்மா தான் இந்த கச்சேரிகளை எல்லாம் ஏற்பாடு செய்து பாட வாய்ப்பு கொடுத்தார். எனவே அவர் முதலில் பாடுவது சரியே ஆகும்" என்று கூறினார். காளை வயசு பாடலைப் பாட ஆரம்பித்தார். சாமி வரம் குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்க மாட்டன் எனப்து போல மைக் சற்று மக்கர் செய்து பின் சரியாகியது. பின்னர் பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக இனிதே வர ஆரம்பித்தன.

சந்திரோதயம் பாடல் முதல் டூயட்டாக அமைந்தது. முந்தின இரவே சுசீலாம்மா என்னிடம் சொன்னார் : "முரளி..நீ எப்படி பாடணுமோ அப்படித் தான் பாடுறே, குரல் மட்டும் TMS சாரைப் போல் இல்லை" என்று. எனக்கு வேறு யாரும் திருப்திகரமாக அமையாததால் வேறு வழியின்றி அதனை பாடும் படி ஆகியது. பாடலின் முன்னே சுசீலாம்மா "சந்திரோதயம் பாடல் TMS சார் பாடினது. இவர் பாடும்போது அவரை நினைச்சுக்கோங்க என்றார்" நகைச்சுவையுடன். நான் "ஆமாம், அவரை நினைச்சுக்கிட்டு என்னை மன்னிச்சுடுங்க" என்று கூறி பாடலை ஆரம்பித்தோம். பாடவேண்டிய டூயட்டுகளில் "சந்திரோதயம்" மற்றும் "விழியே கதை எழுது" - இரண்டிலும் எக்கச்சக்க சங்கதிகள். 3 நாட்களாக பாடி பேசிப் பழகியதில் என் தொண்டையில் சரியான எரிச்சல். பயந்து கொண்டே பாட ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்தவரை, பெரிதாக தவறுகள் ஏதும் செய்யவில்லை. ஆனால் இரண்டிலுமே பயிற்சியின் போது அத்தனை சங்கதிகளையும் பாடி இருந்தாலும், மேடைக்கு வேண்டி சிறிய இலகுவான மாற்றங்களை செய்து (சில இடங்களில் மட்டும்) பாடினேன். நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர் வந்தது "குங்கும பூவே". செம ஹிட். ஜோஸின் கிடார் வாசிப்புடன் ஆரம்பித்தது அந்தப் பாடல். ஜமுனாம்மாவுடன் சேர்ந்து சந்திரபாபுவின் குரலைப் போல மாற்றிப் பாடினேன். மக்கள் கைத்தட்டல் மூலமும், ஆடலின் மூலமும் மகிழ்ச்சியை அறிவித்தனர். பழுத்த கலைஞர்கள் என்பதால், பாடலின் இடைவெளிகளில் அவர்கள் அமர்ந்து கொள்ள ஏதுவாக சுசீலாம்மாவிற்கும் ஜமுனாம்மாவிற்கும் ஒரு சோ·பா போடப் பட்டு இருந்தது. பாடி முடிந்து ஜமுனாம்மா சோ·பாவிற்குப் போகும் வேளையில் என கையை பிடித்து "முரளி, கலக்கிட்டே" என்றார்கள். நிறைவாக இருந்தது. அதனைத் தொடர்ந்து "காதல் சிறகை" போன்ற அழகான பாடல்களை சுசீலாம்மா பாடிக்கொண்டு வந்தார்கள். "காதல் சிறகை" பாட்டிற்கு பரதன் வெகு நேர்த்தியாக மிருதங்கம் வாசித்து மகிழ்வித்த்தார்.

பின்னர் சில டூயட்டுகள் வந்து போயின - அழகிய மிதிலை, ஆதி மனிதன், துயிலாத பெண். இதனைத் தொடர்ந்தது "பாட்டொன்று கேட்டென்". அஞ்சனாவும் ஸ்ரீதேவியும் chorus பாட ஜமுனாம்மாவின் இந்தப் பாடல் மிக அசத்தலாக அமைந்தது. ஜோஸ் கீபோர்டில் புகுந்து live ஆக பியானோ மீட்டித் தள்ளினார். ஜமுனாம்மாவிற்கு மிகுந்த நிறைவு. பார்வையாளர்களுக்கும் சந்தோஷம்.

நிகழ்ச்சியின் பாதியிலே வரும்படியாக "மாமா மாமா" வை அமைத்து இருந்தேன். நான் கணித்தது நல்லவேளையாக சரியாக இருந்தது. பிரணவும் பரதனும் தாளத்தை அடித்து தள்ள, ஆனந்த் ஸ்ரீனிவாசன் ஜமுனாம்மாவுடன் இணைந்து பாட, மற்ற எல்லோரும் chorus பாடி பாடல் ஒருவரையும் சீட்டில் உட்கார விடவில்லை. எல்லோரும் எழுந்து நின்று ஆட்டம் போட ஆரம்பித்து விட்டனர். கணிப்பின் படியே பார்வையாளர்கள் வேண்டுகோளுக்கிணாங்க இந்த பாடல் கடைசியில் பின்னொரு முறை ஒலிக்கப்பட்டது. இரண்டாம் முறை பாடுகையில் ஜமுனாம்மாவுடன் நான் பாடினேன் .

பதினெட்டாவது பாடலாக அமைந்தது விழியே கதை எழுது. இந்தப் பாடல் பாட வரு முன், நேரமின்மை எனக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே சுசில்லாம்மாவிடம் "அம்மா, விழியே பாடலாமா இல்லை முத்துமணி மாலை பாடலாமா" என்று கேட்டேன். "பழையதே பாடலாமே முரளி" என்றார். சரி என்று விழியே பாடலை ஆரம்பித்தேன். அத்தனை பாடல்களிலும் என் குரல் வாத்தியங்கள் இன்றி தனித்து ஒலிப்பதாக ஒரு பாடலும் இல்லை. ஆனால், விழியே பாடலில் முதலில் KJY அவர்கள் வாத்தியங்கள் இன்றி வெறுமே பல்லவியை ஒரு முறை தாளமிண்றி பாடுவதாக அமைந்திருக்கும். அதனை நான் பாட, பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி ஊக்குவித்தனர். அதனை கண்ட சுசிலாம்மா மகிழ்ந்து என்னை பார்த்து திரும்பி கைத்தட்டியது வாழ்வில் எனக்கு மறக்க முடியாத ஒரு நினைவு. ஒரு பெரிய சகாப்த்தின் வாழ்க்கையில் ஒரு சிறு மணித்துளி நானும் நடந்து சென்று இருக்கின்றேன் என்று நினைத்து பார்க்கையில் இப்போது கூட புல்லரிக்கிறது.

இந்தப் பாடல் முடிந்தவுடன், கலைஞர்களை கௌரவிக்க வேண்டி தமிழ் சங்க மக்கள் விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் மேடைக்கு வர சற்றே தாமதமாக, சுசீலாம்மா தன் மனம் போன போக்கில் ஒரு அழகான ஆலாபனை செய்ய ஆரம்பித்தார். ப்ரணவ் மற்றும் ஜோஸ் அதற்கு அழகு சேர்க்க என்னால் சும்மா இருக்க முடியவில்லை (பாடி பழகின வாயும்...). நானும் அவர்களுடன் சேர்ந்து பதில் ஆலாபனை போல் செய்ய சந்தோஷத்துடன் ஊக்குவித்தார். இது முடிந்து கலைஞர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப் பட, ஜோஸ் வந்த போது நான் மைக்கில் சொன்னேன் :

"அம்மா, இவர் எந்த கச்சேரிக்கும் இவ்வளவு உழைத்ததில்லை என்று கூறினார். இதற்கு உழைத்ததில் தனக்கு 20 வயது ஏறிப் போனதாக விளையாட்டாய் குறிப்பிட்டார். ஏன் தெரியுமா ? உங்களுக்கு இந்தியா போனவுடன் இவரது பழைய குருவான தேவராஜன் மாஸ்டருடன் கச்சேரி இருக்கிறதாம். எனவே நீங்கள் அவரை பார்க்கப் போகையில் நல்ல வார்த்தைகள் மட்டுமே சொல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் இரவு பகல் பாராமல் உழைத்து இருக்கிறார்" என்று கூற, ஜோஸ் சுசிலாம்மாவில் காலில் விழுந்து ஆசி வாங்கினார். சுசிலாம்மாவிற்கு அடக்க முடியாத சிரிப்பு.

இவ்வாறாக ஸ்ரீதேவி மேடைக்கு அழைக்கப்பட சுசீலாம்மா " நீ ஒரு பாடல் பாடிவிட்டு தான் செல்ல வேண்டும்" எனச் செல்லமாக பணித்தார். "காற்றினிலே வரும் கீதம்" பாடலை மனம் உருகும் வகையாகப் பாடிய ஸ்ரீதேவியை சுசீலாம்மா " மறைந்த அந்த அம்மா சுவர்க்கத்திலிருந்து உன்னை வாழ்த்துவாங்க. அவங்க இருக்கும்போதும் இறந்த பின்னும் தேவதை தாம்மா" என்று சொல்ல ஸ்ரீதேவி நெகிழ்ந்து கண்களில் கண்ணீர் நிறைந்தது.

பின்னார் எல்லாரும் முடிந்தவுடன், சுசீலாம்மா மைக்கை எடுத்து "இன்னிக்கு கோகுலாஷ்டமி. எல்லாரும் என்கூட இந்தப் பாடலை சேர்ந்து பாடுங்கள்" என்று சொல்லி "பிருந்தாவனமும் நந்த குமாரனும்" பாட ஆரம்பித்தார். பார்வையாளர்கள் வெட்கப்பட்டு பாடாமல் போக ஆண் குரலுக்காக நான் சுசிலாம்மாவுடன் இணைந்து பாடினேன். இவ்வாறாக இனிதே முடிந்தது கச்சேரி. இதற்குப் பின் சுசிலாம்மாவை வீட்டில் சென்று ஒரு 15 நிமிடம் நேர்காணலுக்காக கண்டேன். அதை பற்றி அடுத்த பதிவில் எழுதிகிறேன்.

Sunday, September 04, 2005

P.சுசீலாவுடன் ஒரு பாடல் நிகழ்ச்சி - part 8

பயிற்சி நேரத்தில் பிரணவ் அவர்களின் தபேலா மற்றும் SPD 20 என்ற மின்தாள வாத்தியத்தை (ஹி ஹி..electronic drums) வாசிக்கும் திறமை அறிந்தேன். மனிதர் கொச்சின் கலாபவனில் முதல் 5 வருடம் இரண்டாம் நிலை தபலா வாசிப்பாளராகவும், பின்னர் 5 வருடம் முதன்மையான தபலா வாசிப்பாளராகவும் இருந்த நல்ல அனுபவஸ்தர். P3 விசாவில் பல பேர்களுடன் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த திறமையாளர். சித்ரா, ஜெயசந்திரன் போன்றவர்களுடன் சர்வசாதாரணாமாக வாசிக்கும் வழக்கம் உள்ளவர். இவர் எப்படி வாசிப்பார் என்று தெரியாமலேயே ஜோஸ் அவர்களின் பேச்சை நம்பி பொறுப்பை ஒப்படைத்து இருந்தேன். மனிதர் மலையாளம் தவிர பிறமொழிகள் பேசுவதற்கு மிகவும் சிரமப்படுகிறவர். எனவே வாய் பேசாததை கை பேசும் என்று வந்த உடன் நிரூபித்தார்.

மாணிக்க வீணை பாட்டை பயில ஆரம்பித்தோம். ஜோஸ் தனது கிடாரை எடுத்து முதலில் வரும் வீணை பகுதியை மீட்டிக் காட்டினார். சுசீலாம்மாவிற்கு மிகவும் திருப்தி. முகம் முழுவதும் புன்னகையுடன் ஜோஸின் வாசிப்பை புகழ்ந்தார். ஜோஸிர்க்கு மலையாளமே முதன்மையான மொழி. ஆங்கிலம் சிரமத்துடன் புரிந்து கொள்வார். சுசீலாம்மாவிற்கு தெலுங்கு முதல் மொழி. பேசும் தமிழில் சிறிதே தெலுங்கு வாடை அடிக்கும். பாடும் தமிழில் ஒரு தவறு இருக்காது. அம்மாவிற்கு ஆங்கிலம் அவ்வளவு இலகுவாக வருவதில்லை என்று புரிந்து கொண்டேன். இவர்கள் இருவரும் பேசுவது அறை குறை தமிழில். அது ஒரு வேடிக்கையான ஆனால் ரசிக்கக்கூடிய ஒரு விஷயாமாக இருந்தது. இரு பெரிய கலைஞர்கள், மொழி வேறு என்றாலும் இசையை புரிந்து கொண்டு இசைந்தது பார்க்க மிகவும் நிறைவாக இருந்தது. சுசீலாம்மா பயிற்சி சில சமயம் நிற்கும்போதெல்லாம் ஜோஸ் அவர்களுக்காக தான் மலையாளத்தில் பாடிய பாடல்களை சிறிது பாடி மகிழ்வித்தார். என்னிடம் "முரளி, அவரோட மொழில பாடினா அவர் சந்தோஷப்படுவார் இல்லையா?" என்று சொல்ல எனக்கு அவர்கள் மேல் மதிப்பு உயர்ந்தது. கச்சேரியில் முழுதும் தமிழ்ப்பாடல்களே. ஆனால் சுசீலாம்மாவோ தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கணக்கில்லாமல் பாடி இருக்கிறார். ஒரு சக பிறமொழிக் கலைஞன் தன் கச்சேரிக்காக தமிழ் மொழியில் உள்ள பாட்டுக்களை எல்லாம் பயின்று வைத்திருக்கிறான் என்று தெரிந்து தாமும் அந்த கலைஞனை மகிழ்விக்க அவன் மொழிப் பாடல்களை ஓய்வு நேரத்தில் பாடியது அவரின் கலிஞர்கள் மேல் வைத்திருக்கும் மரியாதையை காட்டியது. பிரணவிற்கும் ஜோஸிற்கும் சுசீலாம்மாவின் மலியாளப்பாடல்கள் அத்தனையும் அத்துப்படி. நௌஷாதின் இசையில் த்வனி படத்தில் வந்த "ஜானகி ஜானே" என்ற அழகான பஜன் பாடலைப் பாடி எல்லோரையும் மகிழ்வித்தார். மாணிக்க வீணை பாடல் மேடையில் முதல் பாடலாக மிகவும் அழகாக ஒலித்தது. பிரணவின் வாசிப்பை இதிலே கேட்டு மகிழ்ந்தோம். மிருதங்கத்திலே பாதியை வெட்டி எடுத்தால் போல் இருக்கின்ற "மிருதங்க தபலா" வில் முழு மிருதங்க ஒலியையும் கொண்டு வந்து மகிழ்த்தினார்.

பின்னர் ஜமுன்னாம்மாவின் மிகவும் பிரபலமாகிய பாடலான "மாமா மாமா" விற்கு வந்தோம். அந்த பாடல் கடைசியாக எடுத்த பாடல் என்பதால், ஒரு interlude மட்டுமெ எடுக்க நேரம் இருந்தது. ஆனால் ஜமுனாம்மா "இரண்டு interlude எடுக்கணுமேப்பா..இல்லைன்ன சரியா வராதே" என்று சொல்ல நாங்கள் எடுப்பதாக உறுதி அளித்தோம். ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களை சந்திரோதயம் பாடல் பாடுவதற்காக வரச் சொல்லி இருந்தேன். அவரின் உச்சரிப்பு எனக்கு திருப்திகரமாக இல்லாததாலும், சங்கதிகள் முறையாக விழாததாலும் அவருக்கு இரு வேறு பாடல்களைக் கொடுப்பது என்று தீர்மானமானது. "துயிலாத பெண் ஒன்று" மற்றும் "மாமா மாமா" இரண்டு பாடல்களையும் அவர் பாடும்படியாக ஆனது. மனிதருக்கு வெண்ணை போல் வழுக்கிக் கொண்டு போகும் குரல். "துயிலாத பெண் ஒன்று" பாடலை மேடையிலும் பயிற்சியிலும் மிக அருமையாகப் பாடி பிரமாதப்படுத்தி விட்டார். பின்னர் நான் சந்திரோதயம் பாடினேன் பயிற்சியிலும். பாடி முடிந்தவுடன் ஆனந்த் என்னை கூப்பிட்டு "முரளி, ரொம்ப கர்னாடகமாக பாடுறீங்க. கொஞ்சம் மாற்றி பாடுங்களேன்" என்றார். ஏற்றுக் கொண்டென்.

"அம்மம்மா காற்று வந்து ஆடை" பாடலில் சுசீலாம்மா சிறிது கஷ்டப்படவே அந்த பாடல் நீக்கப்பட்டது. பெரிய கலைஞர்களுடைய பலமே தங்களுடைய பலவீனங்கள் என்ன என்று தெரிந்து வைத்திருப்பது தான் என்று அழகாக உணர்த்தினார். அந்தப் பாடல் சிறிது உயர்ந்த சுருதியில் இருப்பதால் அதை வேண்டாம் என்று தீர்மானித்தார். மாலைப்பொழுதின் மயக்கத்திலே பாடலும் பின்னே தள்ளப்பட்டது. முத்துமணி மாலை பாடல் வரும்போது "முரளி, இந்த பாடலை பல தடவை பாடியாச்சேப்பா..எனக்கு மனப் பாடமே ஆகிட்டது" என்றார். "இயற்கை எனும் இளைய கன்னி" பாடல் பயிற்சியின் போது "இதை பாடும்போது பாலுவிற்கு (SPB) இளவயது. எனக்கும் சுமாரா இளவயது. ஆனா இப்போ, உனக்கு இளவயசுங்கறதாலே சங்கதிகளாக போட்டு தள்ளறே, இப்போ நான் கொஞ்சம் குறைச்சு தான் போட முடியும் என்றார்". "அம்மா நீங்க இந்த வயசுல போடற சங்கதிகளே என்னை போன்றவர்களுக்கு கஷ்டமாக இருக்கின்றது" என்றேன் காற்று வெளியிடை பாட்டை நினைவு கூர்ந்து. இவ்வாறாக அத்தனை பாடல்களின் பயிற்சியும் முடிந்தது.

இந்த இடத்தில் SL பற்றிய ஒரு விவரத்தைக் குறிப்பிட வேண்டும். SL P.B.ஸ்ரீனிவாஸின் ரசிகர் மட்டுமல்ல. அவரைப்போன்ற குரலும் உடையவர். மயக்கமா கலக்கமா போன்ற பாடல்களை அவர் பாடினால் பக்கத்தில் PBS அவர்களே வந்து பாடியது போல் இருக்கும். உணர்வு பூர்வமாக நல்ல base voiceஇல் அழகான சங்கதிகளோடு பாடக் கூடிய நல்ல பாடகர். எனவே அவரை சுசீலாம்மாவுடன் பாட வைக்க வேண்டும் என்று என்னுள் ஒரு ஆசை எழுந்தது.

நான் : "ஹலோ SL.. அட்லாண்டா வந்து பாடுறீரா ? சுசீலாம்மாவோட ?"

SL : "ஆ..என்னையா கூப்பிடுறே ? நிதி நிலைமை சரி இல்லியேப்பா"

நான் : "யோவ்..நீரா பாடவும் மாட்டீர். கேட்டாலும் வர மாட்டேங்குறீர். சுசீலாம்மா கூட பாட ஒரு வாய்ப்பு இது..நான் தான் orchestra coordinator வேற...இங்க வந்தா மெருகு ஏத்தி பாட வைக்கலாம் அய்யா. கொஞ்சம் யோசிங்க"

SL : "நீ சொல்றது புரியுது. இந்த மாதிரி ஒரு வாய்ப்பு பின்னாடி வராது தான். நிச்சயமா வருத்தமா இருக்கு. இன்னொரு முறை கட்டாயமா வரேன்பா"

வருத்தமாக இருந்தது. பல PBS பாடல்களை அவருக்கு கொடுத்து, சுசீலாம்மாவுடன் அவரை பாட வைத்தால் மேடையில் சுசீலாம்மா அவரை செல்லமாக வம்பிக்கிழுப்பார்கள், சுவாரசியமாக இருக்கும் என்ற ஒரு ரகசிய நப்பாசை இருந்த்து. இந்தாளு மாட்டேன்னு சொல்லி தகர்த்துட்டார். சரி என்று அந்தப் பாடல்களையும் நானே பாடும்படி ஆகியது.

பாடலின் நடுவே சீரகமும் உப்பும் கலந்த பொடியினை அப்பப்போ மென்று கொண்டு இருந்தார் சுசீலாம்மா. எல்லா பாடல்களின் திருத்தங்களையும் குறித்துக் கொண்டு இரவு முழுவதும் உட்கார்ந்து திருத்தி தமிழில் மறுபடி டைப் செய்து அடுத்த நாள் எல்லாப் பாடல்களையும் ஜோஸ¤டன் உட்கார்ந்து சரி பார்த்து ப்ரிண்ட் செய்து sheet protectors போட்டு பாட வேண்டிய வரிசையில் வைத்து 3 folder களாக செய்து மேடை ஏறுமுன் அவர்களிடம் கொடுத்தேன். அவர்களுக்கு பரம சந்தோஷம். இவ்வாறாக கச்சேரி ஆரம்பித்தது.


Saturday, September 03, 2005

P.சுசீலாவுடன் ஒரு பாடல் நிகழ்ச்சி - part 7

ஆதி மனிதன் காதலுக்குப் பின் - இந்தப் பாடல் இசைத்தட்டிலே P.B.ஸ்ரீனிவாஸ் அவர்களுடன் ஜமுனா ராணி சேர்ந்து பாடியதாகும். படம் - பலே பாண்டியா. இந்தப் பாடல் நான் கேட்காத ஒன்று என்பதால் இதனை முதலிலேயே பல முறை கேட்டுக் கொண்டு இருந்தேன். இந்தப் பாடலின் பயிற்சி வந்த போது தான் தெரிந்தது முதலாம் hummingஉம் பாடலில் உள்ள சஙதிகளும் எவ்வளவு கோட்டை நான் விட்டு இருக்கிறேன் என்று. முதலில் ஒரு swing ஸ்டைலில் கிடாருடன் JR உம் PBS உம் மாறி மாறி ஹ¤ம் செய்வார்கள். இதை நன்றாக சொதப்பினேன். அதற்கு ஜமுனாம்மா பொறுமையாக பல முறை சொல்லித் திருத்தினார்கள். நான் சுரப்படுத்தி மனப்பாடம் செய்வதை பார்த்து விட்டு சுரமாக சொல்லிக் கொடுத்தார்கள். இதற்கு ஒரு 15 நிமிடம் பிடித்தது. பின்னே இந்தப் பாடலில் வரும் அனுபல்லவியில் பிரச்சினை இருக்கவில்லை. ஒழுங்காக பாடி விட்டேன்.

சரணம் வரும்போது

ஊரை விட்டு ஓடி வந்த காதல் இது
உறவென்று சொல்லி வந்த காதல்
கால்நடையாய் வந்த காதல் இது
காவியத்தில் இல்லாத காதல்

என்ற் வரும்.

இந்த இடத்திலும் எனக்கு மக்கர் பண்ணியது. நான்:

pada pada pamagama pa;SaSa Sa;SaSa
dani Sani padapada pa;ma ga;;;
mapa mapa marigama ma;;pa ni; -nini
daSa;ni daSanida pa;;; pa;;;

என்று பாட, ஜமுனாம்மா என்னை நிறுத்தி:

"முரளி சங்கதிகள் எல்லாம் தப்பா பாடறியேப்ப்பா. திருத்திக்கணுமே" என்றார். "அம்மா நீங்க சொல்லிக் கொடுத்தீங்கன்னா திரும்ப பாட முயற்சிக்கிறேன்" என்று சொன்னென்.

pada pada pa,m gama pa;dani Sa;SaSa
nSani,da danidani da;;pa ma;;;
mapamapa magariga ma;;pa ni; -nini
da,nSa,n dnini,pa pa;;; pa;;;

என்று திருத்தி சுரப்படுத்திக் கொடுத்தார்கள். இது முடிந்து கடைசியில் humming மறுபடி. இங்கேயும் நான் மக்கர் செய்ய முழு சுரங்களையும் எழுதிக் கொடுத்தார். சுரங்கள் கையில் வந்த பின் சிறிதே ஜுரங்கள் அகன்றன. ஆனாலும் எனக்கு என் மீதே சற்று கடுப்பாக இருந்தது. இந்தப் பாடல் அவ்வளவு கஷ்டமான பாடலும் இல்லை, அவ்வளவு சங்கதிகள் செறிந்த வரிகளும் இல்லை. ஆனாலும் tension காரணமாகப் புரிந்து கொள்ள சிரமப் பட்டதை நினைத்து பார்த்தால் இப்போது சிரிப்பு தான் வருகிறது. எல்லா வரிகள் மீதும் சுரங்களை எழுதிக்கொண்டு விட்டேன். "முரளி, சுரத்தை எழுதிக்கிட்டா, உனக்கு பிரச்சினை இருக்காது" என்று ஜமுனாம்மா சொன்னது போல் பின்னர் பிரச்சினை இன்றி பாட முடிந்தது.

இந்தப் பாடல் பயிற்சி முடியும் முன்னரே சுசீலாம்மாவும் ஜமுனாம்மாவும் சஹஜமாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள். அப்பப்போ என் காலை வாரிக் கொண்டே இருந்தார் சுசீலாம்மா. விழியே கதை எழுது பாடலில், "தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது" என்ற இடத்தில் எப்படி classical கமகம் வருகின்றது என்பதை அழகாக விளக்கிச் சொன்னார் சுசீலாம்மா. "என்னப்பா முரளி..சொந்த சங்கதி போடறே ? MSV சொந்தமா சங்கதி போட்டா விட மாட்டாருப்பா" என்று சொல்லி சத்தமாக சிரிக்க ஆரம்பித்து விட்டார். எனக்கு நாக்கை பிடுங்கிக் கொள்ளாலாம் போல இருந்தது. ஆனாலும் குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால குட்டுப்பட்ட சந்தோஷம். நான் போட்ட சங்கதியை அப்படியே காற்றில் விட்டு விட்டு அவர்கள் சொல்லிக் கொடுத்த சங்கதியை பழக ஆரம்பித்தேன். இரண்டு மூன்று விளக்கங்களுக்கு பிறகு பிடித்துக் கொண்டேன். (பின்னர் நிகழ்ச்சியில் இந்தப் பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது). அதற்குப் பிறகு வந்தது காற்று வெளியிடை கண்ணம்மா.

சுசீலா : "இந்த பாட்டு இருக்கா ?"
நான் : "ஆமாம்மா"
சுசீலா : "யாரு பாடறது ?"
நான் : (சிறிதே அதிர்ச்சியுடன்) "நான் தான்.."
சுசீலா : "அய்யோ..நீயா ? எனக்கு பாட்டு சுத்தமா மறந்து போச்சே"
(முற்றிலும் மாறுபட்ட மெட்டில் பாடிக் காமிக்கிறார்)

நான் : (அதிர்ச்சியுடன்) "அம்மா..ட்யூனையே மாத்திட்டீங்களே"
சுசீலா : (பலமாக சிரித்துவிட்டு) "தெரியும்பா..நான் தானே அதை பாடினேன். பாட்டை போட்டுக் காமி"

பாட்டை போட்டவுடன் அந்த சங்கதிகளை அப்படியே கிரஹித்துக் கொண்டார். அதைப் பார்த்து அசந்து போனேன்.

சுசீலா : "ஆ..நீ பாடுப்பா"
நான் : "செத்தேன்"

எல்லோரும் சிரித்து ஓய்ந்தனர்.

நான் : "சங்கதிகளை எதுக்கும் ராத்திரி ஒரு தடவை பார்த்துக்கறேன்"
சுசீலா : "ராத்திரி பூரா பாடி குரலை கெடுத்துக்காதே, ப்ரோகிராமில் ஒழுங்கா பாடணும் புரியுதா ?"
நான் : "சரிம்மா"

Friday, September 02, 2005

P.சுசீலாவுடன் ஒரு பாடல் நிகழ்ச்சி - part 6

இந்த சூழ்நிலையில் பரதன் அவர்களை மிருதங்கம் மற்றும் தபேலாவிற்காக தொடர்பு கொண்டேன். ஸ்ரீரங்கம் எம்பார் லக்ஷ்மி நாராயணனின் சீடரும், பல மாநில விருதுகளை வாங்கி 10 வருடம் நல்ல அனுபவமும் உள்ளாவரான அவர், எனக்கு முன்னமே பல கச்சேரிகளில் வாசித்துள்ளார். ஒரு முறை அட்லாண்டாவில் GAMA - மலையாளிகள் சங்க விழாவிற்காக என்னை பாட அழைத்தபோது, திரு சதிஷ் மேனன் அவர்களுடன் சேர்ந்து "தேவசபாதளம்" என்ற "His highness abdullah" படத்தின் பாடலை பாடினேன். மிக சிரமமான பாடல். தபேலாவும் (deepak shenoy), மிருதங்கமும் மாறி மாறி வருகின்ற கர்னாடக / இந்துஸ்தானி இசைக் கோர்வைகளைக் கொண்ட அற்புதமான பாடல். இருவரும் மிகஹ் சிறப்பாக வாசித்தனர். பின்னர் நாஷ்விலில் "பாட்டும் நானே" பாடலிற்கு மிகப் பிரமாதமாக வாசித்து அசத்தினார். பல அரங்கேற்றங்களில் வாசித்து அட்லாண்டா நகரில் வெகு நன்றாக அறியப் படுபவர். அவரது மனைவி ஸ்ரீதேவியின் "காற்றினிலே வரும் கீதம்" அட்லாந்தவில் மிகப் பிரசித்தம்.

குண்டை தூக்கி போட்டார்.

பரதன் : "முரளி - ரொம்ப கஷ்டமாச்சே..பயிற்சி weekends ல ஏற்கனவே எனக்கு வேற வேலைகள் இருக்கே..ஊரில் இருக்க மாட்டேனே"

நான்: "நீங்க இல்லாம அல்லது ஜோஸ் இல்லாம் இந்தக் கச்சேரி நடக்காது. கொஞ்சம் முயற்சி பண்ணுங்களேன்"

ஆனால் கடைசி ஐந்து நாட்களில் ஜோஸ் உடன் அமர்ந்து தூக்கம், உணவு பார்க்காமல் உழைத்து அத்தனை பாடல்களுக்கும் சுசீலாம்மா வருவதற்குள் தன்னை தயார் செய்து வைத்து இருந்தார். வியந்து போனேன். இப்படி ஒரு மனிதரா ? இப்படி ஒரு ஈடுபாடா என்று. கச்சேரியிலும் மிக அழகாக வாசித்து பிரமாதப் படுத்தி விட்ட்டார்.

இப்படி எல்லாறும் தயார் செய்து வைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி அளவில் திரு நாகி வீட்டில் பயிற்சிக்காக ஒன்று சேர்ந்தோம். நாங்கள் பயிற்சி செய்யுங்காலை, சுசீலாம்மா ஜமுனாம்மாவுடன் வந்தார்கள். வந்து அங்கு போட்டு இருந்த சோ·பாவில் அமர்ந்தார். எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக பரிச்சயம் செய்து கொள்ள "யாருப்பா முரளி, கைதூக்குங்க" என்று வேடிக்கையாக கேட்க, நான் ஏழுந்து நின்றேன். அங்கு இருந்த கூட்டத்திலேயே நான் தான் மிக இளையவன். எனவே என்னை பார்த்து "இந்தப் பையன் இதை செஞ்சு முடிச்சுடுவானா"ங்குற மாதிரி ஒரு சந்தேக பார்வையுடன், "என்னப்பா practice எல்லாம் நல்ல வந்து program நல்ல வந்துடுமில்ல ?" என்று சிரித்தபடியே கேட்டார்.

நான் : "அம்மா.. என்னால என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் செஞ்சுடறேன். நீங்க மேடைக்கு வந்து பாடினால் போதும். எல்லா வரிகளையும் நானே கைப்பட computerஇல் எழுதியும் வெச்சு இருக்கேன். நீங்க கவலையே படாதீங்க" என்று (குருட்டாம்போக்கு) தைரியத்துடன் சொன்னேன்.

இங்கே நான் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். நான் எல்லா குழுவிலும் கீபோர்டு வாசிப்பேன் மற்றும் பாடுவேன். குழுவின் அங்கத்தினர் பாடும்போது நிறைய திருத்தி இருக்கிறேன். தமிழைத் திருத்தி இருக்கிறேன். சுரத்தை திருத்தி இருக்கிறேன். கமகங்களை திருத்தி இருக்கிறேன். ஆனால் இவ்வளவு பெரிய இசைக்குயிலோடு பாடும்போது என் வேலை என்ன என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னுடைய பாடல் வரிகளை முடிந்த வரை நன்றாக பயின்று கொண்டு வந்தேன். அது போக எல்லா பாடல்களிலிம் எப்போது நிறுத்த வேண்டும் எடுக்க வேண்டும் என்ற விவரங்களையும் எடுத்து வந்திருந்தேன். பயிற்சி ஆரம்பமானது.

=============================================

ஆலயமணியின் ஓசையை பாடலில் இருந்து பயிற்சி ஆரம்பமானது. interlude இல் சில தவறுகள் இருப்பதை சுட்டி திருத்தினார் சுசீலாம்மா. இந்த பாடல் திருத்தபட ஒரு மணி நேரம் ஆயிற்று. கூட வந்தவர்களுக்கெல்லாம் tension எகிற ஆரம்பித்தது. ஒரு பாடலுக்கு ஒரு மணி நேரம் என்றால், மீதி ஒன்பது பாடல்கள் பார்க்க இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று. சுசீலாம்மாவிடம் முன்னமே நான் "அம்மா..ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வைத்து மொத்தம் 8 மணி நேரம் பயிற்சிக்காக ஒதுக்கித் தர வேண்டும் என்று கேட்டு இருந்தேன்". அதிலே ஒரு மணி நேரம் போய் விட்டதே என்று தேன்ராஜாவும் மற்ற்வர்களும் கவலைப்படலாயினர். ஆனால் எனக்கு ஜோஸ் அவர்கள் மீது நம்பிக்கை இருந்தது. ஆலய மணியின் அந்த ஷெனாய் வரியில் "மபமக மகரிச ரிசசா" என்று வருமிடத்தில் "மபமக மகரிச ரிசரிசசா" என்று ஒரு தவறு செய்திருந்தார். சிறிது களைப்புடன் காணப்பட்டதாலோ என்னவ்ள அவருக்கு அது சட்டென்று புரியவில்லை. கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு அதனை சரி செய்தார். அதற்குப் பின் பாடல்கள் மளமளவென்று பயிற்சி செய்யப்பட்டன. ஜமுனாம்மாவின் காளை வயசு பாடலில் இது போல ஒரு சிறிய பிரச்சினை இருந்தது. அதுவும் சீர் செய்யப் பட்டது. பின்னர் வந்தது "ஆதி மனிதன் காதலுக்குப் பின்". இதை பற்றி விரிவாக எழுதுகிறேன்.

P.சுசீலாவுடன் ஒரு பாடல் நிகழ்ச்சி - part 5

இவ்வறாக தனித்து பயிற்சி ஒரு புறம் நடந்து கொண்டு இருந்தாலும், அடிக்கடி சுசீலாம்மாவை SL உடன் தொடர்பு கொண்டு பாடல்கள் பற்றிய கதைகளை கேட்பது வாடிக்கையானது. (அதாவது சுசீலாம்மாவையும் எங்கள் அரட்டைக் கச்சேரிக்கு இழுத்தோம்னு கொஞ்சம் மரியாதையாக சொல்றேன் :) ) SL ஒரு இசைக்களஞ்சியம். சுசீலாம்மாவும் உலகும் எல்லோரும் மறந்து போன பழைய பாட்டு சுரங்கங்களிலிருந்து தோண்டி எடுக்கும் ஒரு வித்தகர். மேடையிலே பாடக் கூடிய பாடல்களைத் தயார் செய்யும் போது, "அம்மா..அன்பில் மலர்ந்த நல் ரோஜா" பாடுங்க என்று சொல்ல, சுசீலாம்மா சிரிசிரியென்று சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

சுசீலாம்மா : "யேங்க ஸ்ரீராம் (SL)..இந்த பாட்டெல்லாம் மேடைக்கு ஒத்து வராதுங்க. ஜனங்க தூங்கி வழியுவாங்க"

SL : "அம்மா..என்னை மாதிரி ஆளுங்க விரும்பி கேப்பாங்கம்மா"

சுசீலாம்மா : "ஆனா மத்தவங்க கேக்க மாட்டங்கப்பா"

SL : "அம்மா..நீங்களும் லதா மங்கேஷ்கரும் ஒரு டூயட் பாடி கேக்கணும்னு ஒரு ஆசை அம்மா"

சுசீலாம்மா : "இப்போ அது சரிப்பட்டு வராதுங்க. ஆனா, ஆஷா (போன்சலே) கூட ஒரு டப்பிங் படத்திற்காக பாடியிருக்கேன். பாட்டு என்னன்னு ஞாபகத்துக்கு வரலை. ஆனா ரொம்ப தங்கமானவங்க. நல்ல கல கலனு பேசுவாங்க. சலீல் சௌதிரி அவர்கள் கூட என்னை இந்தில பாட கூப்பிட்டாரு. நான் தமிழ் நாட்டை விட்டு எங்கேயும் வரமாட்டேன்னு சொல்லிட்டேன்..என்ன முரளி சத்தமே இல்லை ?"

நான் : "என்ன பேசம்மா ? எனக்கு இவர் சொல்ர பாட்டு ஒண்ணு கூட தெரியலை. அதான் அவர் பேச Wஇங்க பாட நான் அமைதியா இருந்து கேட்டு கிட்டு இருக்கேன்"

சுசீலாம்மா : (சிரித்து விட்டு) "அது சரி..இங்க கனடாவுல..டி.எம்.எஸ். சார் வந்தார். அவருடைய மகன்களும் வந்து இருக்காங்க. முதலில் 3 பாடல் தான் பாட வலு இருக்குன்னு சொன்னார். அப்புறம் ஆறு பாடல்கள் பாடினார். அடேயப்பா...ரொம்ப பிரமாதம்"

SL : "முரளி..நீ நம்ப மாட்டே..முதல் முறையா அம்மா என் பேச்சை கேட்டு இருக்கங்க. அவங்க பாடாத பாட்டுக்கள்னு தேர்வு செஞ்சு ஒரு 25 பாட்டு வெச்சு இருக்கேன். அதை வெச்சு ஒரு கச்சேரி பண்ணலாம்"

சுசீலாம்மா : "அது பண்ணலாம். ஆனா கஷ்டமாசே..sponsor பிடிக்கணும்.. audience உக்காந்து கேக்கணும். நீங்க எதுக்கும் அந்த லிஸ்டை mail ல அனுப்பி வைங்க"

SL : "mp3 யோட அனுப்பி வைக்கறேன் மா"

இதுபோன்று ஒரு நாள் பேசி முடித்து விட்டு, நானும் SLஉம் பிற்பாடு பேசிக்கொண்டு இருந்தோம்.

SL : "டேய்..Do you realize the gravity of the situation ? We are talking to Susheela, the legend, do you even realize that ? Talking to her as if she is our friend, hearing songs over the phone, do you think you realize the weight of the situation ? This is something incredible man"

அப்டின்னார் உணர்ச்சி வசப்பட்டு. என் மண்டையில அப்போ அது உறைக்கல. ஆனா பிற்பாடு கச்சேரிக்காக முழுவதும் உழைத்த பின் சுசீலாம்மா பயிற்சி நேரத்துக்கு வந்து சேர்ந்தாங்களோ, அப்போது உறைத்தது.

==========================================

இதற்கு இடையே அட்லாண்டா தமிழ் சங்கம் (உமா முரளிதர்) முத்தமிழ் விழாவிற்காக வேண்டி சுசீலாம்மாவை தனியாக தொடர்பு கொண்டார்கள். அவர்களிடம் சுசீலாம்மா அவர்களுக்கே உரிய பிரியத்துடன் "நான் முரளிப்பையனிடம் எல்லாத்தையும் பேசிட்டேன். அவன்கிட்டே கேட்டுக்கோங்க. அவன் மட்டும் கூட பாடினா போதும். Local artists வேற யாரும் தேவை இல்லை இந்த முறை" என்று சொல்ல அவர்களுக்கு குழப்பம். குழப்பம் என்னவென்றால், அவரது கணவர் பெயரும் முரளி, என் பெயரும் முரளி. "நம் கணவரை பையன் என்று சொல்லுகிறார்களே..அதோடு அவர்கிட்ட பேச வேற செஞிருக்கஙன்னு சொல்றாங்களே..என்ன இது" இந்தக் குழப்பம் தீர இரண்டு நாட்கள் ஆனது. பின்னர் எல்லாம் தெளிந்து திரு நாகி நடராஜன் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாளார் ஆனார். இப்போது இந்த நிகழ்ச்சி முழுவதும் GATS தமிழ் சங்கம் பொறுப்பு எடுத்துக்கொண்டு செய்வதாக வந்து அமைந்தது.

P.சுசீலாவுடன் ஒரு பாடல் நிகழ்ச்சி - part 4

இப்படியாக பாடல் வரிசையை தீர்மானித்த பின், சுசீலாம்மா "யாருப்பா கூட வாசிக்க போறாங்க ?"ன்னு கேட்டாங்க.

நான்: "அம்மா..இங்க ஒரு professional orchestra இருக்கு. Guitar Jose னு ஒருத்தர் இருக்கார். உங்க கூட எல்லாம் asianet tv ல வாசிச்சு இருக்கார். அவர் கூட பிரணவ் என்ற கொச்சின் கலாபவனில் பயின்ற ஒரு தபலா மற்றும் SPD drums வாசிக்கற ஒருத்தரும் இருக்கார். இவங்களை வெச்சி தான் நாம பண்ணலாம்னு எனக்கு எண்ணம்"

சுசீலா : "ஓ..Guitar Jose ஆ ? அவர் super ஆச்சே..பிரமாதமா வாசிப்பாரே...அவர் அட்லாண்டவில தான் இருக்காரா இப்போ ?"

நான்: "ஆமாம்மா. இப்போ இங்க பல பேருக்கு வாசிக்கறதோடு மட்டும் அல்லாமல் கத்துக் கொடுக்கவும் செய்யுறார்"

(...இந்த நேரத்தில் ஜோஸைப் பற்றி இங்கே சொல்லி ஆக வேண்டும். அற்புதமான கலைஞர். யேசுதாஸ், சித்ரா, ஜெயசந்திரன், SPB, சுசீலா போன்ற உன்னதமான கலைஞர்களுடன் மேடையிலே கிடார் வாசித்த அனுபவசாலி. கையிலே கிடாரை எடுத்தார்னா, மாண்டொலின், சிதார், வீணை எல்லவற்றின் ஒலியையும் அவற்றில் அனாயாசமாக கொண்டு வரும் சூரர். வாசிப்பு அப்படியே ஒலி நாடாவில் கேட்பது போல் இருக்கும். மலையாள படங்களின் இசையமைப்பாளரான தேவராஜனுக்கு 5 வருடம் வலது கரமாக விளங்கி அத்தனை orchestra விற்கும் notes எழுதி conduct செய்த வித்தகர். இப்படிப்பட்டவருடன், மார்ச்சு மாதம் நாஷ்விலில் கச்சேரி செய்தேன். அந்தக் கச்ச்சேரிக்கு "பாட்டும் நானே" பாடலை எடுப்பது என்று தீர்மானித்து விட்டாயிற்று. ஆனால் எங்கனம் அதன் வீணை மற்றும் புல்லாங்குழல் இசை வரிகளை எடுப்பது என்று திண்டாடிக்கொண்டிருந்த நேரம் தெய்வ சங்கல்பமாக ஜோஸ் வந்து சேர்ந்தார். மிருதங்கத்தில் பரதனுடன் நான் முன்னமேயே சுரங்களை எல்லாம் பயிற்சி செய்து வைத்திருந்த்தேன். (பரதனைப் பற்றி பின்னர் சொல்லுகிறேன்). நண்பர் புலிகேசிக்காக வேண்டி அத்துணை வீணை மற்றும் புல்லாங்குழல் இசை வரிகளை சுரப் படுத்தி வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பழக்கிக் கொண்டு இருந்தேன். ஜோஸ் வந்தார். கிடாரை எடுத்தார். வீணை வரிகளை அப்படியே உள்ளது உள்ளது போல் மீட்டித் தள்ளினார். அப்படியே வாயடைத்துப் போய் உட்கார்ந்தோம் எல்லோரும் ! பின்னர் அவர் நாஷ்விலில்னந்த பகுதிகளை வாசிக்கும் நேரம் பார்வையாளர்கள் மத்தியிலிருந்தும் மிகுந்த கரகோஷம் எழுந்தது )

சுசீலா : "ரொம்ப நல்லதுப்பா..இந்த மாதிரி ஆட்கள் மற்றும் குழு இருக்கின்றது என்று தெரிந்து இருந்தால் இன்னும் கொஞ்சம் கச்சேரிகள் ஏற்பாடு செய்திருக்கலாமே முன்னமேயே"

நான் : "நிச்சயமாக அம்மா. அடுத்த முறை போதிய அவகாசம் கொடுத்தால் நிச்சயம் நிறைய கச்சேரிகள் செய்ய நான் ஏற்பாடு செய்கிறேன்"

எனக்கு சுசீலாம்மாவுக்கு ஜோஸ் அவர்கள் பரிச்சியமான்வர் என்பது சிறிது ஆசுவாசத்தைக் கொடுத்தது. பழகிய கலைஞர்கள் மத்தியிலே ஒரு நல்ல ஒட்டுறவு இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அது உண்மையுமானது.

பிறகு தேன்ராஜ காளியப்பனை தொடர்பு கொண்டோம். தங்கமான மனிதர். அத்தனை பாடலின் mp3 வடிவங்களையும் உடனடியாகத் தந்து உதவினார். பின்னர் ஜோஸ¤டன் கலந்து ஆலோசனை செய்தேன். அவர் சொன்னார்:

"முரளீ, எனக்கு ஒவ்வொரு பாட்டும் அந்த original போலவே வரணும். அது வரை எனக்கு தூக்கம் வராது. எனவே நான் இப்பொழுதே ப்ரொகிராம் செய்ய ஆரம்பிக்கிறேன் " என்று. இப்படியாக முழு நிகழ்ச்சியும் sequence செய்து வாசிப்பதாக முடிவு செய்யப்பட்டது. கையில் ஜோஸ் போன்ற திறமை மிகுந்த ஆட்களை வைத்துக் கொண்டு எதற்காக seq செய்ய வேண்டும் ? ஆனால் என்ன நேர்ந்ததென்றால், அமெரிக்காவில் வாழும் அத்தனை இந்திய கீபோர்டு வாசிப்பவர்களும் (professional) அந்த வார இறுதியில் கிடைப்பவராக இல்லை. குன்னக்குடி வைத்தியனாதனின் பிள்ளை முதற்கொண்டு எல்லாவரிடமும் கேட்டு பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது. பின்னர் வேறு வழி இன்றி ஜோஸிடம் seq செய்ய சொன்னேன். இங்கே நான் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லியாக வேண்டும். seq செய்து வாசிப்பது என்பது, எனக்கும் சரி, ஜோஸ¤க்கும் சரி, பிடிக்காத காரியம் (சுசீலாம்மவுக்கும் பிடிக்காத காரியம் என்பது பின்னே தெரிந்தது). ஆனால், ஒவ்வொரு பாடலையும் seq செய்வது என்பது எளிதான செயல் இல்லை. ஜோஸை போன்ற ஒரு திறமை வாய்ந்த கலைஞனுக்கே ஒரு பாடலுக்கு 5 மணி நேரம் பிடித்தது. இப்படியாக 25 பாடல்கள் ! மனிதர் அயராமல் ராப் பகல் உட்கார்ந்து எல்லாப் பாடல்களையும் முடித்து விட்டார் ! நான் ஒவ்வொரு வார இறுதியிலும் சென்று அவருடன் அமர்ந்து எல்லா குறிப்புகளையும் திருத்தி பதிவுகள் செய்து கொண்டேன். இப்படியாக 25 பாடல்கள் தயாரானது.

P.சுசீலாவுடன் ஒரு பாடல் நிகழ்ச்சி - part 3

ஒரு மாத காலமாக சுசீலாம்மாவுடன் மேடைக் கச்சேரி செய்வதற்கான ஆலோசனைகள் நடந்தேறி வந்தன. இந்த மேடைக் கச்சேரி எப்படி அமைந்தது என்பது ஒரு சுவையான சமாசாரம். நண்பர் திரு Sriram Laxman(SL) அவர்களுடன் தொலைபேசியில் வெட்டிக் கலந்துரையாடல் செய்வது என்பது என்னுடைய ஒரு பொழுது போக்கு. அவரின் பழைய இந்தி, தமிழ் பாடல்கள் பற்றிய அறிவு மிகப் பரந்து விரிந்தது. ஒரு முறை இங்கனம் கதைக்கையில், "MS, சுசீலம்மா இங்கே தான் ஹ¥ஸ்டனில் இருக்கிறாங்க. இப்போ தான் அவங்களிடம் பேசினேன்" என்றார். SL சுசீலா, பி.பி.ஸ்ரீனிவாஸ் போன்ற கலைஞர்களுடன் அடிக்கடி அளவளாவுவார். ஆனால், அது எப்போதும் சென்னையில் தான் நடக்கும். (ஸ்ரீனிவாஸ் அவர்களுடன் அவர் பலமுறை உட்லாண்ட்ஸ் உணவு விடுதியில் அமர்ந்து பேசி இருக்கின்ற துளிகளை எல்லாம் என்னோடு பகிர்ந்து கொண்டு உள்ளார்.) இந்த முறை சுசீலம்மா உடன் அமெரிக்காவில் பேசினேன் என்று சொன்னதும், ஒரு ரசிகனுக்குரிய நப்பாசையில் கேட்டென்.

நான் : "எனக்கும் அவர்களுடன் பேச உதவுங்களேன்" என்றேன்.
SL: : "ஓ நிச்சயமா".
நான்: "அம்மா எப்படி நல்ல பேசுவாங்களா ?"
SL : "ஓ ..ரொம்ப நல்ல பேசுவாங்க. இப்போ கூட ஒரு மணி நேரம் பேசினேன்"

(ஓ. இந்த ஆளு கூட ஒரு மணி நேரம் பேசினாங்கன்னா அம்ம நல்ல பேசுர டைப் தான் என்று நினைத்துக் கொண்டேன் மனதில்)

நான் : "அப்போ என்னிக்கு பேசலாம் ?"
SL : "முரளி, அவங்க இங்க கச்சேரி செய்துகிட்டே வர்றாங்க. இந்த மாசம் கொஞ்சம் ஃரீயா இருக்காங்க போல. கச்சேரிக்கு தேதி கேட்க முடியும்னு தோணுது. உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா ?"

நான் : "அட்லாண்டா நண்பர்களை கேட்டு சொல்றேன்"




தரங் என்ற இசைக்குழுவை நிர்வகித்து வரும் நண்பர் கோபியை அணுகினேன்.

நான் : "சுசீலம்மா கச்சேரி செய்யரதுக்கு தேதி தருவாங்க போல இருக்கு. உங்களுக்கு விருப்பமா ?"
கோபி: "சுசீலம்மாவா ? நிச்சயமாப்பா. உடனே பேசு அவங்க கிட்ட"




நான் : "யோவ் SL, சீக்கிரமா மும்முனை தொலைபேசித் தொடர்பு ஏற்படுத்திக் கொடும்"
SL : "ஹி ஹி..அதுக்கு எனக்கு வசதி இல்லை..நம்பர் தரேனே.."
நான் : (மனசுக்குள்ள) சாவுகிராக்கி.. "கொடுத்து தொலையும்"
(டிரிங் டிரிங்)

நான் : "ஹலொ..சுசீலாம்மாவா ? வணக்கம்மா. நான் முரளி பேசறேன். SL வோட ·ப்ரண்டு. அவர் லைன்ல இருக்கார். கொஞ்சம் இருங்க"
சுசீலா : "சரிப்பா"
SL : "அம்மா வணக்கம். உடலும் உள்ளமும் நலந்தானா ?"
சுசீலா : (பெரிதாக சிரித்துவிட்டு) "நலம் தாம்பா எல்லாம்.. நீங்க நல்லா இருக்கீங்களா ?"
SL: "மிகவும் நலம். அம்மா நம்ம கூட முரளி - என்னோட நண்பன் இருக்கான். ரொம்ப நல்லா பாடுவான்."
நான் : (திக் திக்) "வணக்கம் அம்மா. எத்தனையோ கோடி ரசிகர்களில் நானும் ஒருத்தன்"
சுசீலா : "அப்படியாப்பா ரொம்ப சந்தோஷம். எங்க இருக்கீங்க நீங்க ?"
நான் : "அம்மா நான் வயசுல ரொம்ப சின்னவன். கலையிலும் தான். அதனால நீங்க என்னை நீ வா போன்னே சொல்லுங்க"
சுசீலா : (பெரிதாக சிரித்துவிட்டு) "ஓ..சரி..எங்க இருக்கே நீ ?"
நான் : "தெற்கு கரோலினாவுல இருக்கேன் மா. அட்லாண்டாவில இருந்து 4 மணி நேரம்"
சுசீலா : "நல்லதுப்பா. என்ன விஷயமா கூப்டீங்க ?"
நான் : "விஷயம்னு பாத்தா - முதல்ல உங்க கூட பேசறதுக்கு உள்ள ஆசை. அதுக்கப்புறம் உங்க கச்சேரி அட்லாண்டவுல வெச்சுக்க உங்களுக்கு வசதிப்படுமான்னு கேக்க கூப்டோம்"
சுசீலா : எந்த தேதிப்பா ?
நான் : இந்த மாசக் கடைசி ஒத்து வருமா உங்களுக்கு ?
சுசீலா : நிச்சயமா. அப்பொ நான் ·ரீ தான். ஆனா நீ 4 மணி நேரம் தள்ளி இருக்கேன்னு சொல்றியே. இது நடக்குமா ?"
நான் : "நீங்க சரின்னு சொல்லுங்க. நான் இதை எப்படியும் நடத்திடறேன்"
சுசீலா : (மறுபடியும் சிரித்துவிட்டு) "சரிப்பா. நிச்சயம் செய்யலாம்"
நான் : "அம்மா என்ன பாட்டேல்லாம் வெச்சுக்கலாம்"
சுசீலா : "ஜமுனாம்மாவும் கூட இருக்காங்க. அவ்ங்களோட பாட்டுக்களையும் சேர்ந்து தான் பாடணும்."
நான் : "நிச்சயமா."

அப்படி தயாரான வரிசை:
=================

(1) மாணிக்க வீணை
(2) ஆலயமணியின்
(3) காளை வயசு
(4) சந்திரோதயம் ஒரு
(5) கண்ணன் என்னும் மன்னன்
(6) ஆதி மனிதன்
(7) காதல் சிறகை
(8) பால் போலவே
(9) மாமா மாமா
(10) துயிலாத பெண் ஒன்று
(11) புன்னகை மன்னன்
(12) நான் சிரித்தால்
(13) முத்துமணி மாலை
(14) விழியே கதை எழுது
(15) இயற்கை எனும்
(16) காற்று வெளியிடை கண்ணம்மா
(17) அழகிய மிதிலை நகரினிலே
(18) மலரே மலரே
(19) குங்கும பூவே
(20) மாலைப்பொழுதின்
(21) பாட்டொன்று கேட்டேன்
(22) காலைத் தென்றல்
(23) அத்தை மடி

சுசீலா : "யாருப்பா கூட பாடுறாங்க ?"
நான் : "நீங்களும் ஆடியன்சும் தப்ப நினைக்கலைன்னா நான் பாடலாம்னு.."
சுசீலா : " நீயா..அப்போ நான் வரேன் பா" (மறுபடியும் சிரிப்பு)
நான் : "அம்மா..நில்லுங்க.."
சுசீலா : "கொஞ்சம் பாடிக் காட்டு"
(விழியே கதை எழுது/ இயற்கை எனும்/ பாடிக் காட்டுகிறேன்)
சுசீலா : "ரொம்ப நல்லா இருக்குப்பா. நீயே எல்லா பாட்டுக்களையும் பாடு. தனி பாட்டு ஏதாச்சும் பாடுறியா ?"
நான் : "அம்மா..இது உங்க கச்சேரி. நான் தனிப் பாட்டெல்லாம் பாட விரும்பலை"
சுசீலா : "சரி. டி.எம்.எஸ் சார் குரல்ல வருதே - சந்திரோதயம் - அது பாட முடியுமா ? உனக்கு பாலு பாட்டும் யேசுதாஸ் பாட்டும் நல்லா வருது"
நான்: "இங்க யாராச்சும் கிடைக்கறாங்களான்னு பாக்கரேம்மா"
சுசீலா : "சரிப்பா மத்தபடி சுருதி கொஞ்சம் குறைச்சு பாடணும். வயஸாயிடிச்சு இல்லியோ.."
நான் : "யாருக்குமா..எனக்கா ?"
சுசீலா : (மறுபடி சிரிக்கிறார்).."இல்லைப்பா. எனக்கும் ஜமுனாவுக்கும்."
நான் : "உங்களுக்கு என்ன வசதிப்படுமோ, அப்படியே செஞ்சுக்கலாம்."

Thursday, September 01, 2005

P.சுசீலாவுடன் ஒரு பாடல் நிகழ்ச்சி - part 2

ஒரு வழியாக இசைக் கச்சேரி முடிந்தது. சுசீலாம்மாவும் ஜமுனாம்மாவும் பாடி முடிச்சுட்டு இந்தியா போயாச்சு. எக்கச்சக்க வீடியோ எடுத்தாசு. ப்ராக்டீஸ் ல இருந்து எல்லாத்தையும் வீடியோ பண்ணியச்சு. 3 நாள் கண் முழிச்சு குறிப்பெடுத்து, திருத்தி, பாடி எல்லாம் செஞ்சதுல உடம்பு மோசமாகி ஜுரமும் வந்திடுச்சு. கொஞ்சம் ஜுர வேகம் கம்மி ஆன உடனே விலாவரியா எழுதறேன். எல்லாமே நல்ல நினைவுகள்..