Introduction and Announcements

  
New Original ! 
Aankhon ko - आँखों को

Older Compositions : Haule SeUdalin Thiriyaale , Choolena
Available in iTunes and Amazon !!

Learn Indian Classical Dance in Riyadh   !!

Thursday, April 26, 2012

கனவு கலையும் காலையில் - பாடல் வரிகள்

காலையில் கணவனும் மனைவியும் கட்டிலில் காதல் உறவாடுகின்ற நேரம் எழுவது போல் அமைந்த பாடல்.  வரிகளும் மெட்டும் தயார்.  இசைக்கோர்வை (orchestration) இன்னும் முடியவில்லை..முதலில் வரிகள் இங்கே..

பல்லவி :
========

பெ : கனவு கலையும் காலையில்
        கண்கள் திறக்க மறுக்கிறாய்
        கைகள் கோர்த்து வருடியே
        காதல் மீண்டும் கேட்கிறாய் !

        மனமே மார்கமா ?
       முழுதும் தாபமா ? - விழி
       திறக்கும் நேரம் வீம்பாய் - எனை
       திணறச் செய்கிறாய் !

ஆ:  கனவு கலையும் காலையில்
        கவிதை போலப் பேசுவாய்
        இலவம் பஞ்சின் மென்மையாய்
        இதயப் பூவை திறக்கிறாய் !

        அழகே ! ஆறுமா ?
        சுகங்கள்  ! போதுமா ? - விழி
        திறக்கும் நேரம் கூட - எனை
        கிறங்கச் செய்கிறாய் !

 சரணம் 1 :
==========

ஆ:   உதய நேரம் வானிலே
         உலவ வந்த சூரியன்
         கலவி பழக நிலவைத் தேடி
         கனலை உமிழ்கிறான்

பெ : இதயக் கூட்டின் சூட்டிலே
         இன்பத் தீயின் வேள்விகள்
         இரவு முழுதும் வளர்த்தும் இன்னும்
         வேண்டும் என்கிறாய் !

ஆ:   காதல் தீயின் நாளங்கள்
         கடலின் அளவு ஆசைகள்
         கடலைப் பருக முயன்று தோற்ற
         கதிரின் வேதனை !


 சரணம் 2 :
==========

ஆ:  சுவாசக்காற்றின் ஊதலில்
         உடல்கள் கணப்பு ஆனது
        அதர மதுரம் கடைவதில்
        உதிரம் சிறிது உதித்தது

பெ : உவகை ஊற்றில் என்னுடல்
         உருகி வழியும் கணமதில்
         வலிகள்  மறந்து போனதே
         வழிகள் இன்ப வானுக்கே !

ஆ:  மனக்கடலின் மேற்புறம்
         மகிழ்வலைகளின் தாக்கமே !
        உடல்கள் நனைய உயிர்கள் கரைய
        உதய இரவிது !

No comments:

Post a Comment